திருப்பூர்:நேற்று முன்தினம் இரவு, மின்சாரம் தாக்கி, ஒருவர் பலியானார்; நஷ்ட ஈடு வழங்கக்கோரி, உறவினர்கள், தொழிலாளர்கள், வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பாண்டியராஜன் மகன் கண்ணன், 28. ஐந்து ஆண்டுகளாக, குமார் நகர் மின்வாரிய அலுவலகத்தில், கணக்கில் வராத, தற்காலிக பணியாளராக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.00 மணிக்கு, லட்சுமி நகர் பகுதியில் மின்தடைஏற்பட்டுள்ளதாகவும், சரி செய்து வருமாறும், "போர்மேன்' கூறியுள்ளார்.பியூஸ் போட கண்ணன், மின்கம்பத்தில் ஏறியபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். வடக்கு போலீசார்,சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.நேற்று காலை 7.00 மணிக்கு, கண்ணனின் உறவினர்கள் மற்றும் திருப்பூர் மின் கோட்டத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிவருபவர்கள், "மின் பகிர்மான கழக அதிகாரிகள், எங்களிடம் பணியாற்ற சொன்னாலும், விபத்து ஏற்பட்டால், யார் என்றே தெரியாது; மின் பகிர்மான கழக பணியாளர்களை தவிர யாரும் பணி செய்யக்கூடாது என அறிவித்து விடுகின்றனர்.கண்ணன் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களிடம், போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
Monday 31 December 2012
Friday 7 December 2012
31-க்குள் மின் விநியோகம் சீராகாவிட்டால் வேலைநிறுத்தம்
31-க்குள் மின் விநியோகம் சீராகாவிட்டால் வேலைநிறுத்தம்
By அவிநாசி,
First Published : 22 December 2012 04:43 AM IST
வரும் 31-ஆம் தேதிக்குள் சீரான மின்சாரம் வழங்காவிட்டால் வேலைநிறுத்தம் செய்வதென விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டுக் கமிட்டிக் கூட்டம், தெக்கலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
தெக்கலூர் பகுதி தலைவர் எஸ்.சுப்பு தலைமை வகித்தார்.
இதில், தமிழக அரசு மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கடந்த ஏப்ரலில் விசைத்தறித் தொழிலுக்கு கடுமையான கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதனால், விசைத்தறியாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சிறு, குறு விசைத்தறியாளர்களின் நலன் கருதி சென்னைக்கு நிகராக, மாநிலம் முழுவதும் சீரான மின்சாரம் வழங்க வேண்டும். தொடர் மின்வெட்டால் விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
டீசல் வாங்கித் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. டிச.31-க்குள் சீரான மின்சாரம் வழங்காவிட்டால் வேலைநிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. விசைத்தறியாளர்களுக்கு டீசலை மானிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மங்களம், சோமனூர், பெருமாநல்லூர், 63 வேலம்பாளையம், பல்லடம், தெக்கலூர், சூரிபாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Subscribe to:
Posts (Atom)