திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் லட்சுமி விலாஸ் வங்கி ஏ.டி.எம். உள்ளது. எஸ்.பெரியபாளையத்தை சேர்ந்த முத்துசாமி (வயது 58) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நள்ளிரவு 2 மணி அளவில் ஆம்னி வேனில் 3 பேர் முகமூடி அணிந்தபடி வந்து இறங்கினர். அவர்களில் ஒருவன் வெளியே நின்று கொண்டான்.
மற்ற 2 பேர் ஏ.டி.எம். சென்டருக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவன் முத்துச்சாமியின் வாய் மற்றும் கை - கால்களை கட்டினான். மற்றொருவன் கடப்பாறையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றான். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சிலர் வந்தனர். வாகனங்களை பார்த்ததும் வெளியே நின்று கொண்டிருந்தவன் சைகை காட்டினான்.
மற்ற 2 பேர் ஏ.டி.எம். சென்டருக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவன் முத்துச்சாமியின் வாய் மற்றும் கை - கால்களை கட்டினான். மற்றொருவன் கடப்பாறையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றான். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சிலர் வந்தனர். வாகனங்களை பார்த்ததும் வெளியே நின்று கொண்டிருந்தவன் சைகை காட்டினான்.