போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 27 October 2012

திருப்பூரில் நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


திருப்பூரில் நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் லட்சுமி விலாஸ் வங்கி ஏ.டி.எம். உள்ளது. எஸ்.பெரியபாளையத்தை சேர்ந்த முத்துசாமி (வயது 58) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நள்ளிரவு 2 மணி அளவில் ஆம்னி வேனில் 3 பேர் முகமூடி அணிந்தபடி வந்து இறங்கினர்.  அவர்களில் ஒருவன் வெளியே நின்று கொண்டான்.

மற்ற 2 பேர் ஏ.டி.எம். சென்டருக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவன் முத்துச்சாமியின் வாய் மற்றும் கை - கால்களை கட்டினான். மற்றொருவன் கடப்பாறையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றான். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சிலர் வந்தனர். வாகனங்களை பார்த்ததும் வெளியே நின்று கொண்டிருந்தவன்  சைகை காட்டினான். 

Saturday 20 October 2012

திருப்பூரில் மின்வெட்டை கண்டித்து பாத்திர உற்பத்தியாளர்கள் "ஸ்டிரைக்'

திருப்பூர்:தொடர் மின்வெட்டை கண்டித்து, திருப்பூர் அனுப்பர்பாளையம் அனைத்து பாத்திர உற்பத்தியாளர் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடந்தது. கறுப்புக்கொடியுடன் ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி வழங்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Wednesday 17 October 2012

திருப்பூர் மின்வெட்டை கண்டித்து "டிவி', மின் விசிறியை பாடையில் கட்டி ஊர்வலம்


திருப்பூர் : தொடர் மின்வெட்டை கண்டித்து, "டிவி', மின் விசிறியை பாடையில் கட்டி, ஊர்வலமாக எடுத்து சென்று, மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.திருப்பூர் வடக்கு ஒன்றிய இ.கம்யூ., மாநகர 20வது வார்டு கிளை சார்பில், "மின்வெட்டை கண்டித்தும், சீரான மின்சாரம் கோரியும்' போயம்பாளையம் ஆர்.கே., நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. காந்தி நகர், கணபதி நகர், சதாசிவம் நகர், வடிவேல் நகர், பழனிச்சாமி நகர், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதிகாரிகள் தரப்பில் சரியாக பதிலளிக்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், "டிவி' மற்றும் மின்விசிறியை, பாடையில் கட்டி, ஊர்வலமாக வந்து பி.என்.ரோடு போயம்பாளையம் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒருவர், கிழிந்த சட்டையுடன், கையில் சட்டியுடன் நின்றிருந்தார். அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் சையதுபாபு, சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினார். "மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்,' என பொதுமக்கள் கூறினர்.
அனுப்பர்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியம் வந்து, பேச்சு நடத்தினார். "மழை பெய்வதால் மின்வெட்டு குறைய வாய்ப்புள்ளது.கூடுதலாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். அதன்பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Sunday 14 October 2012

காங்கேயம் பகுதியில் 14 மணி நேர மின் தடையால் அரிசி உற்பத்தி-எண்ணை ஆலைகள் பாதிப்பு


காங்கேயம் பகுதியில் 14 மணி நேர மின் தடையால் அரிசி உற்பத்தி-எண்ணை ஆலைகள் பாதிப்பு
காங்கயம் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன் பகுதிகளுக்கு களிமேடு துணை மின்சார நிலையம் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆயிரம் பேர் வாழ்ந்து வரும் இந்த காங்கயம் சுற்று வட்டார பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாகவே நிலவி வரும் மின்சார தட்டுப்பாடு படிப்படியாக அதிகரித்து தற்போது கடுமையாக அனைவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. 

மின்சாரத்தையே நம்பியுள்ள பொதுமக்களும், வியாபாரிகளும், தற்போது மிகவும் நொந்து போகும் அளவுக்கு மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 

Wednesday 10 October 2012

மின்சாரம் தயாரிக்க "நமக்கு நாமே' திட்டம்:திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு முயற்சி


திருப்பூர், : கடும் மின்வெட்டால் முடங்கியிருக்கும் பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில், நமக்கு நாமே மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை முன் வைத்து அதற்கான பூர்வாங்க முயற்சியில் திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு ஈடுபட்டுள்ளது.
 பின்னலாடை ஏற்றுமதி மையமான திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகமும், ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புக்கு உள்நாட்டு வர்த்தகமும் நடைபெறுகிறது. மாநிலத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாவும் இந்தத் தொழிலை சார்ந்துள்ளனர்.
 பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சி மேற்கொண்டுவரும் பின்னலாடைத் தொழில்துறைக்கு, மின்வெட்டு பிரச்னை பேரிடியாக உள்ளது. மின்சாரத்துக்காக அரசை நம்பி பயனில்லை. அரசு உதவியுடன் நமக்கு நாமே மின்சாரம் உற்பத்தி செய்துகொள்வது தான் எதிர்கால நலனுக்கு நன்மை பயக்கும் என்ற சிந்தனையை விதைக்கும் முயற்சியில், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
 இதற்காக பல்வேறு தொழில் அமைப்புகள், சங்கங்களின் நிர்வாகிகளின் ஆலோசனைகளைப் பெற இக்குழு முயற்சி எடுத்து வருகிறது.
 இதுகுறித்து தொழில் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார் கூறியது: 
 மின்வெட்டு பிரச்னைக்காக போராட்டங்கள் நடத்துவதில் எந்தவித பலனும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இப்பிரச்னை நீங்க 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை நீடிக்கும். அரசை எதிர்பார்ப்பதைக் காட்டிலும், அரசு உதவியுடன் நமக்கு நாமே மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்வதுதான் எதிர்காலத்துக்கு நன்மை தரும்.
 மாநகருக்கு ஒட்டுமொத்தமாக 200 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்காக, சூரிய சக்தி மின்சாரத்தை இத்திட்டத்தின்கீழ் உற்பத்தி செய்துகொள்ளும் திட்டத்தை தொழில் பாதுகாப்புக் குழு முன் வைக்கிறது.
 சூரிய சக்தி அல்லது காற்றாலை மின்சாரம் அல்லது இருவகையிலும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்வது போன்ற சாத்தியக்கூறுகள் தொழில் நிறுவனங்கள், அமைப்புகள் ஆலோசனைக்கு முன் வைக்கப்படுகிறது.
 சூரிய சக்தியில் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 5 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.7 கோடி முதலீடு வீதம், 200 மெகாவட் மின்சார உற்பத்திக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுவதுடன், ரூ.1,100 கோடி செலவு ஏற்படும்.
 இதில், 75 சதவீதம் வங்கிக் கடன் பெற இயலும். திருப்பூர் தொழில்துறையினர் ரூ.300 கோடி வரை முதலீடு செய்ய வேண்டும். இதற்காக புறம்போக்கு இடத்தை அரசு வழங்க வேண்டும். சிறிய அளவில் 25 கிலோ வாட் மின்சார உற்பத்திக்கு ரூ.30 லட்சம் தேவைப்படும்.
 இதுபோன்ற சிறிய அளவிலான சூரிய சக்தி மின்சார உற்பத்தியை, தனிப்பட்ட முறையில் தொழில் நிறுவனங்கள், வர்த்தக வியாபார நிறுவனங்கள் அமைத்துக்கொள்ளலாம். ரூ.1.5 லட்சம் செலவில்கூட ஒரு கிலோ வாட் மின்சாரத்தை வீடுகளில் உற்பத்தி செய்துகொள்ள முடியும்.
 இதற்காக, சூரிய சக்தி மின்சார பிளான்ட் தயாரிப்பு நிறுவனங்களை அழைத்து திருப்பூரில் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்து வருகிறோம். தனி நபர்கள், சூரிய சக்தி மின்சார பிளான்ட்டுகள் அமைப்பதன் மூலமாக 100 மெகாவாட் மின்சாரத்தை பெற முடியும்.
 மற்றொரு பகுதி 100 மெகாவாட் மின்சாரத்தை பொதுவான முறையில் உற்பத்தி செய்யலாம். இந்த முறையில் 100 மெகாவாட் சூரிய சக்தி மின்சார உற்பத்திக்கு 500 ஏக்கர் நிலம், ரூ.600 கோடி முதலீடு தேவைப்படும். இது சாத்தியமான திட்டம் தான்.
 சூரிய சக்தி மின்சாரம் மூலமாக, காலை 6 முதல் மாலை 6 மணி வரை தடையில்லா மின்சாரம் கிடைக்கும். அரசிடம் மின்சாரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. டீசல் செலவு ஏற்படாது.
 இந்த முயற்சி வெற்றி பெறும்போது, 25 ஆண்டு காலத்துக்குத் தேவையான மின்சாரத்தை நமக்கு நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியும் என்றார்.

அடிப்படை வசதி கோரி ஊத்துக்குளியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்



திருப்பூர், அக். 9: ஊத்துக்குளி பேரூராட்சியில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ÷ஊத்துக்குளி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வாரம் இருமுறை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், தேவையான பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குடிநீர்க் குழாய்கள் அமைக்க வேண்டும், பொது சுகாதாரத்தைப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 ÷சமுதாய நலக் கூடத்தில் அனுமதி கேட்கும் மக்களுக்கு அலைக்கழிக்காமல் அனுமதி வழங்க வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதை முன்வைத்து பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
 ÷ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆர். குமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கை. குழந்தைசாமி, வி.கே. பழனிசாமி, எஸ். லட்சுமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். பின்னர் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tuesday 2 October 2012

திருப்பூர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய நடைமுறை : படிவம் கொடுத்தால் வீட்டுக்கு தபால் வரும்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. எட்டு லட்சத்து 86 ஆயிரத்து 652 ஆண்கள்; எட்டு லட்சத்து 54 ஆயிரத்து 841 பெண்கள்; 22 திருநங்கைகள், என, 17 லட்சத்து 41 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர். பட்டியலில் பெயர் சேர்க்க, புதிதாக படிவம் கொடுத்தால், அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக, தபால் துறை மூலமாக வீட்டுக்கு கடிதம் அனுப்பும் நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.