போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Thursday 30 August 2012

ஊத்துக்குளி அருகே தனியார் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

திருப்பூர் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், அக்கூட்டத்தை புறக்கணித்த சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தனியார் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மக்களின் கருத்துகளை அறியும் வண்ணம், கலெக்டர் தலைமையிலான கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அனல்மின் நிலையத்தால், தாங்கள் மேற்கொண்டுள்ள விவசாயம் பாதிக்கப்படும் என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதைப் புறக்கணித்துள்ளன.

Tuesday 28 August 2012

ஊத்துக்குளி சிறு குவாரி உரிமையாளர் முறையீடு


திருப்பூர்:"அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரிக்கும் குவாரிகளுக்கு குடிசைத் தொழில் அங்கீகாரம் வழங்க வேண்டும்,' என, சிறு குவாரி உரிமையாளர்கள் முறையிட்டுள்ளனர்.ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையம் பகுதியில் சேடர் பாளையம், தொட்டியவளவு, சப்பட்ட நாயக்கன்பாளை யம், திம்மநாயக்கன்பாளையம் ஆகிய ஊர்களிலும், ஏ.பெரியபாளையம் பகுதியில், வெள்ளியம்பாளை யம், கோவிந்தம்பாளையம், நல்லகட்டிபாளையம், ஊனாங்காட்டுப்பாளையம், பெத்தாம்பாளையம் ஆகிய ஊர்களிலும், சிறு கல் குவாரிகள் ஏராளமாக உள்ளன. இங்கிருந்து கற்களை வெட்டியெடுத்து அம்மிக்கல், ஆட்டுக் கல், கிரைண்டர்களுக்கு கல் தயாரித்து விற்கப்படுகிறது.
அண்மையில், மதுரை பகுதியில் குவாரிகள் மூலம் நடந்த ஊழல்கள் மற்றும் விதிமீறல்கள் குறித்த பிரச்னையை தொடர்ந்து, திருப்பூரிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு நடத்திய அதிகாரிகள், "முறையாக உரிமம் மற்றும் பெர்மிட் பெற்ற பின்பே கல் எடுக்க வேண்டும்,' என, அறிவுறுத்தியுள்ளனர். இதனால், கடந்த 10 நாட்களாக கல் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிறு குவாரி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள், ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கலெக்டர் அலு வல கம் வந்தனர். "இத்தொழிலுக்கு குடிசை தொழில் அங்கீ காரம் பெற, ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்தி உரிமம் பெற தயாராக உள்ளோம்,' என, கலெக்டர் அலுவலகம் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் மனு அளித்தனர்

Saturday 25 August 2012

திருப்பூர் தாலுகாவை இரண்டாக பிரிக்க கருத்துரு சமர்ப்பிப்பு உதயமாகிறது


திருப்பூர்:நிர்வாக வசதிக்காக, திருப்பூர் தாலுகாவை இரண்டாக பிரிப்பதற்கான கருத்துரு, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேலம்பாளையம், நல்லூர் பிர்க்காக்கள் உதயமாக உள்ளன.திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் ஒன்றியம், பொங்கலூர் ஒன்றியத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக திருப்பூர் தாலுகா அமைந்துள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை, வளர்ந்து வரும் தொழிற்சாலைகள், பரவலாகி வரும் குடியிருப்புகள், அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து, மாநகராட்சி மற்றும் மாவட்ட அந்தஸ்துக்கு உயர்ந்த நிலை என பல தரப்பிலும், இதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Friday 24 August 2012

கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? டெய்லி 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்!

திருப்பூர்: தமிழக மக்களுக்கு பவர்கட் என்பது பழகிப்போய்விட்டாலும் அடுத்தடுத்து ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரிய உதயத்திற்கு முன் எழவேண்டும் என்ற வார்த்தைகளை பின்பற்றினார்களோ இல்லையோ 6 மணிக்கு கரண்டு போகும் முன் எழுந்து மிக்சியில் அரைக்க வேண்டியதை அரைத்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக 5 மணியில் இருந்து வேலையை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

குழந்தைகளுக்கு ஆபத்து வதந்தி பரவல் ;முச்சந்தியில் தேங்காய் உடைத்து பரிகாரம்


திருப்பூர்: பிறந்த குழந்தை பேசியதாகவும், குழந்தைகள் உயிருக்கு ஆபத்து என வதந்தி பரவியதாலும் தமிழகத்தில் பலரும் தங்களுடைய குழந்தைக்கு தலையை சுற்றி தேங்காய் உடைத்தனர். இதனால் தேங்கி கிடந்த தேங்காய்க்கு மவுசு ஏற்பட்டதுடன் சில மாவட்டங்களில் தேங்காய் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

தர்ம்புரி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல் முளைத்த பிறந்த குழந்தை பேசியது என்பது தான் அந்த செய்தி :

Friday 17 August 2012

ஊத்துக்குளி அருகே கல்குவாரியில் அனுமதியின்றி கல் எடுத்த வாகனங்கள் பிடிப்பு



திருப்பூர் : ஊத்துக்குளி அருகே அனுமதியின்றி குவாரியில் கல், மண் எடுத்துச் சென்ற லாரிகள், டிராக்டர், பொக்லைன் இயந்திரம், கம்பரசர் ஆகிய ஆறு வாகனங்களை, கனிம வளத்துறையினர் நேற்று பிடித்தனர். சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க ஆர்.டி.ஓ.,க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி அருகே முரட்டுப்பாளையத்தில் குவாரிகள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்து "பெர்மிட்' இல்லாமல் கனிம வளமான கற்கள், மண் ஆகியவை லாரிகளில் கடத்துவதாக, கனிம வளத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கனிம வளத்துறை உதவி இயக்குனர் முருகானந்தம் தலை மையில் பணியாளர்கள், முரட்டுப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்."பெர்மிட்' இல்லாமல், கற்களை எடுத்து வந்த மூன்று லாரிகள், மண் எடுத்து வந்த டிராக்டர், கற்களை லாரியில் லோடு செய்ய பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், வெடிவைக்க துளை போட்ட கம்பரசர் டிராக்டர் என ஆறு வாகனங்களை பிடித்தனர். இவ்வாகனங்கள், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க, கனிம வளத்துறை உதவி இயக்குனர், ஆர்.டி.ஓ.,க்கு பரிந்துரை செய்துள்ளார். முரட்டுப்பாளையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனிம வளத்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ஈமுவை தொடர்ந்து புது மோசடி அம்பலம் :செல்லமுத்து எச்சரிக்கை


பல்லடம் : ""ஈமுவை போல் தற்போது விவசாயிகளிடம் தேங்காய் மோசடி செய்வதில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவ்விஷயத்தில் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என, உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து எச்சரிக்கை செய்துள்ளார். பல்லடத்தில் நிருபர்களிடம் செல்லமுத்து அளித்த பேட்டி:

சிவன்மலை கோவிலில் தண்ணீர் வைத்து பூஜை: பருவமழை மீண்டும் கை கொடுக்குமா?


காங்கேயம்: சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில், பக்தர் கனவில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்ததால், சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டது. இதனால், பருவமழை மீண்டும் கை கொடுக்கும் என, பக்தர்கள் நம்புகின்றனர்.

திருப்பூர் உள்ளூர் சேனலில் பல லட்சம் ரூபாய் நிலுவை :வசூல் செய்ய முடியாமல் அரசு கேபிள் திணறல்


திருப்பூர் : உள்ளூர் சேனல் ஒளிபரப்பு செய்த வகையில், பல லட்சம் ரூபாய் அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷனுக்கு நிலுவை உள்ளது. அத்தொகையை வசூலிக்கும் வழி தெரியாமல் அந்நிறுவனம் திணறுகிறது.அரசு கேபிள் கார்ப்பரேஷன் மூலம் கடந்தாண்டு அக்., முதல் கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டன. உள்ளூரில் கேபிள் சேனல்கள் ஒளிபரப்பு செய்ய சில நிறுவனங்கள் முன் வந்தன. அரசு வழங்கிய சாட்டிலைட் சேனல்கள் தவிர பகுதி வாரியாக 4 முதல் 10 தனியார் உள்ளூர் சேனல்களுக்கு ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்தாண்டு உள்ளூர் சேனல் ஒளிபரப்பு அனுமதிக்கப்பட்ட போது 7 சேனல்கள் ஒளிபரப்பை துவக்கின. கேபிள் கார்ப்பரேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஆனந்தன், எம்.பி., சிவசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களின் பெயர்களில் சில சேனல்களை துவக்கினர்.

TANGEDCO NEWS: டிரான்ஸ்பார்மரில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி

TANGEDCO NEWS: டிரான்ஸ்பார்மரில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி: திருப்பூர் : "பியூஸ்' போட, டிரான்ஸ்பார்மரில் ஏறிய ஒருவர், மின்சாரம் தாக்கி இறந்தார்.திருப்பூர், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ளது பவானி...

Wednesday 15 August 2012

பாறைக்குழியால் குழந்தைகளுக்கு ஆபத்து

திருப்பூர் அருகே கொளத்துப்பாளையம் ரோட்டின் ஓரத்தில் பெரிய பாறைக்குழி உள்ளது. இவ்வழியாக 10க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் செல்வதால், மாணவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இக்குழியை மூட, நடவடிக்கை எடுக்கும்படி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் கொளத்துப்பாளையம் பிரிவு ரோடு உள்ளது. அங்கிருந்து பாரப்பாளையம் செல்லும் வழியில், பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டிலி தோட்டத்தில், பெரிய பாறைக்குழி உள்ளது. இந்த ரோட்டின் வழியாக, அரசு டவுன் பஸ் ஆறுமுறையும், மினி பஸ் நான்கு முறையும், 10க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களும், லாரிகளும் வந்து செல்கின்றன. ரோட்டின் ஓரத்திலேயே பாறைக்குழி இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், இப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.பொட்டிலி தோட்டம் பகுதி மக்கள் கூறியதாவது:
பாறைக்குழி உள்ள ரோட்டின் வழியாக காலையிலும், மாலையிலும் பள்ளி வாகனங்கள் வந்து செல்கின்றன. காலை நேரத்தில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, பள்ளி துவங்கும் முன் செல்ல வேண்டும் என்று டிரைவர்கள் வேகமாக ஓட்டிச் செல்கின்றனர். ரோட்டிலிருந்து மூன்றடியில் 20 அடி ஆழமுள்ள பெரிய பாறைக்குழி உள்ளது.
எவ்வித பாதுகாப்பு தடுப்பும் இல்லை. பொட்டிலி தோட்டத்தில் இருந்து, ஊத்துக்குளி மெயின் ரோட் டுக்கு வரும் வழியில் உள்ள வளைவில், வாகனத்தை திருப்பத் தவறினால், நேராக பாறைக்குழிக்குள் விழக்கூடிய வகையில் உள்ளது. வேகமாகச் செல்லும் பள்ளி வாகனங்களும், பஸ்களும், ஒவ்வொரு முறையும் இப்பாறைக்குழியை கடந்து செல்லும் வரை, எங்களுக்கு நிம்மதி இருக்காது.ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் வாகனங்கள், இரவில் இவ்வழியாக அசுர வேகத்தில் செல்கின் றன. பாறைக்குழியால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகம் முயற்சி எடுத்து, பாறைக்குழியை மூட ஏற்பாடு செய்ய வேண்டும், என்றனர்.

தானியங்கி சேவை மையம் மூலம் கட்டணம் செலுத்த வரவேற்பு

                       திருப்பூரில் தானியங்கி சேவை மையம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. மாதந்தோறும் 20 ஆயிரம் பேர், அம்மையம் மூலம் மின் கட்டணம் செலுத்துகின்றனர். அதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்தவும், கூடுதலாக இயந்திரங்கள் நிறுவவும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

TANGEDCO NEWS: (ஒவ்வொரு மின் நுகர்வோரும் அவசியம் படிக்க வேண்டியது...

TANGEDCO NEWS: (ஒவ்வொரு மின் நுகர்வோரும் அவசியம் படிக்க வேண்டியது...: மின்வாரிய சேவைத்துறையை சந்தைக் காடாக்குவதா? (தீக்கதிரில் எஸ்.யஸ்.சுப்பிரமணியன்) தமிழக மின் வாரியத்தை பற்றி நாள் தோறும் செய்திகள் வந்த வ...

Tuesday 14 August 2012

மின்னுற்பத்தி குறைவால் மீண்டும் மின்வெட்டு அவதி : காற்று வீசாததால் ஓய்வெடுக்கும் காற்றாலைகள்

திருப்பூர் : காற்றாலை மின்னுற்பத்தி, மூன்றில் இரண்டு பங்கு குறைந்ததால், திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் மின்வெட்டு துவங்கியுள்ளது. மின்வெட்டு நேரமும், மின் விடுமுறை நாளும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்ட
மிடப்பட உள்ளது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், தொழில் துறையினரும், பொது மக்களும் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில், உயர் மின்னழுத்த இணைப்பு தொழிற்சாலைகள், பனியன், விசைத்தறி தொழில் நிறுவனங்கள், வணிக மின் இணைப்புகள், வீட்டு மின் இணைப்புகள் என 5.72 லட்சம் இணைப்புகள் உள்ளன. தினமும் 7.2 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது.தமிழகம் முழுவதும் ஏற்பட்ட மின் பற்றாக்குறை காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன்பு வரை, நான்கு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டும், அறிவிக்கப்படாத மின்வெட்டு பல மணி நேரமும் ஏற்பட்டது. தொழில் நகரமான திருப்பூர், இதனால் கடுமையாக பாதித்தது. பனியன் உற்பத்தி பாதிப்பு; ஏற்றுமதி தொழில் பாதிப்பு; தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு; தொழில் முடக்கம் என பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது. மின்வெட்டு மட்டுமின்றி, தொழிற்சாலைகளுக்கு வாரத்துக்கு இரு நாட்கள் மின் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

Saturday 11 August 2012

திருப்பூர் :ரயிலில் விழுந்து இறப்பவர்கள் யார்?திணறும் ரயில்வே போலீசார்


 ரயிலில் விழுந்து இறப்பவர்கள் யார் என்று தெரியாத சூழலில், விசாரணை நடத்துவதற்கு, சென்னையில் பின்பற்றுவதுபோல், திருப்பூரில் தனிக்குழு ஏற்படுத்த வேண்டும்.ரயில் முன் விழுந்து தற்கொலை, வாகனங்கள் மீது மோதல், கால்நடைகள் மீது மோதல் போன்ற காரணங்களுக்காக ரயிலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், அத்தகைய விபத்தின்போது ரயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் நிறுத்திக் கொள்ளலாம். இத்தகைய விதிமுறைகளாலும், பின்னால் வரும் ரயில்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், தனி நபர் தற்கொலைகளின்போது ரயிலை நிறுத்துவதில்லை.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் சரகத்தில் வஞ்சிபாளையம், முதல் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட், மண்ணரை, கூலிபாளையம், ஊத்துக்குளி பகுதி ரயில்வே டிராக்கில் விழுந்து பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தாண்டு துவக்கம் முதல் கடந்த வாரம் வரை 76 பேர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துள்ளனர். இறந்தவர் அணிந்திருந்த ஆடையில், முகவரி மற்றும் உறவினர்களை பற்றிய விவரம் இருந்தால், தகவல் சொல்வதற்கு உதவியாக இருக்கிறது.வயதானவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொள்ளும்போது அவர் யார்; எந்த ஊர்; என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டனர் என போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பின்பும் உறவினர்கள் யாரும் தேடி வராமல் இருந்தால், பிரேதத்தை அடக்கம் செய்ய தனியார் தொண்டு நிறுவனத்தை நாட வேண்டியுள்ளது. இறந்தவர் பெயரில் சந்தேகம், உடலில் வெட்டு காயங்கள் இருந்தால் என்.ஜி.ஓ.,க்களும் அடக்க செய்ய முன்வருவதில்லை. ரயில்வே போலீசார் செய்வதறியாது திகைக்கின்றனர்.சென்னையை பின்பற்றலாமே!சென்னையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்பவர் எண்ணிக்கை ஏராளம். இறந்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க உள்ளூர் பிரதிநிதி, போலீஸ் அதிகாரி ஒருவர், என்.ஜி.ஓ., ஒருவர், ரயில்வே போலீஸ் பணியில் உள்ள மூத்த அதிகாரி உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர் பற்றிய விவரம் கிடைக்கவில்லையெனில், அப்பகுதியில் உள்ள மக்களிடம் அக்குழு விசாரணை நடத்தும். உறவினர்கள் இருந்தால் பிரேதம் ஒப்படைக்கப்படும். இதேபோல், திருப்பூரிலும் குழு அமைத்தால் ரயில்வே போலீசாரின் தலைவலி தீரும்.

Friday 10 August 2012

ஊத்துக்குளி பகுதியில் வரும் 17ல் மின் வினியோகம் தடைபடும்

ஊத்துக்குளி பகுதியில் வரும் 17ல் மின் வினியோகம் தடைபடும்.ஊத்துக்குளி உதவி மின்வாரிய செயற்பொறியாளர் ( Kannan Ramasamy )வெளியிட்டுள்ள தகவல் : ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் வரும் 17.08.2012 ல் மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அன்று காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.


ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., ரெட்டிபாளையம், வி.ஜி.புதூர், தாலிக்கட்டி பாளையம், தள வாய்ப்பாளையம், பி.வி.ஆர்.,பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்களப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப் பாளையம், கவுண்டம்பாளையம்.கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்., பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கண்ணி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், விருமாண்டாம்பாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், நீலாக்கவுண்டம்பாளையம் மற்றும் செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது

கேபிள் "டிவி' ஆபரேட்டர்களுக்கு கிடுக்கிப்பிடி : இணைப்புகளை சமர்ப்பிக்க உத்தரவுகேபிள் "டிவி' ஆபரேட்டர்களுக்கு கிடுக்கிப்பிடி : இணைப்புகளை சமர்ப்பிக்க உத்தரவு


திருப்பூர் : "அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷனில் இணைப்பு பெற்றுள்ள கேபிள் ஆபரேட்டர்கள், இணைப்பு எண்ணிக்கையை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், பகுதி வாரியாக வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கப்படும்,' என, அரசு கேபிள் "டிவி' நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், முந்தைய தி.மு.க., ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட அரசு கேபிள் "டிவி' நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. மாவட்டம்தோறும் கேபிள் "டிவி' கட்டுப்பாட்டு அறைகள் முழு வீச்சில் துவங்கப்பட்டு, கேபிள் ஆபரேட்டர்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டது.முதல்கட்டமாக, 100 சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

Wednesday 8 August 2012

திருப்பூர் மாவட்டத்தில் 51 பள்ளி, கல்லூரி வாகன தகுதிச்சான்று ரத்து


திருப்பூர் மாவட்டத்தில் 51 பள்ளி, கல்லூரி வாகன தகுதிச்சான்று ரத்து
திருப்பூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் சோதனை முடிந்து விட்டது. திருப்பூர் வடக்கு மற்றும் அவினாசி பகுதிகளில் வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி தலைமையில் சோதனை நடந்தது. இதில் 380 பள்ளி வாகனங்கள், 83 கல்லூரி வாகனங்களை சோதனையிட்டதில் 22 பள்ளி வாகனங்கள், 10 கல்லூரி வாகனங்கள் என்று 32 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. 

129 வாகனங்களில் உள்ள சிறு, சிறு குறைகளை நிவர்த்தி செய்ய நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. இதேபோல் திருப்பூர் தெற்கு, பல்லடம் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரி சத்யநாராயணன் தலைமையில் நடந்த சோதனையில் 223 பள்ளி வாகனங்கள், 19 கல்லூரி வாகனங்கள் என்று 242 வாகனங்கள் சோதனையிடப்பட்டது. இதில் 8 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. இதில் 2 வாகனங்களை தகுதி இழப்பு செய்து அந்த வாகனங்களை ஓட்டக்கூடாது என்று நிறுத்தப்பட்டு உள்ளது. 

44 வாகனங்களில் உள்ள சிறு குறை களை நிவர்த்தி செய்ய நோட்டீசு வினியோகம் செய்தனர். இதில் 20 வாகனங்களில் பழுது நீக்கப்பட்டு போக்கு வரத்து அதிகாரிகளிடம் காண்பித்து ஓட்டுவதற்கு அனுமதி பெற்றனர். தாராபுரம் மற்றும் உடுமலை பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரி உதயகுமார் தலைமையில் நடந்த சோதனையில் 112 பள்ளி வாகனங்கள், 17 கல்லூரி வாகனங்கள் என்று 129 வாகனங்கள் சோதனையிடப்பட்டது. இதில் 11 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்ட வாகனங்களில் உள்ள பழுதுகளை சீரமைத்து அதன் பின்னர் வட்டார போக்குவரத்து அதிகாரியின் அனுமதியை வாங்கிய பிறகே இயக் குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்

ஊத்துக்குளியில் மாவட்ட கவுன்சிலர் காரை திருடியவர் கைது


திருப்பூர், : ஊத்துக்குளி திம்மநாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் பெரியசாமி. திருப்பூர் மாவட்ட கவுன்சிலராக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டு முன் தனது காரை நிறுத்தி இருந்தார். 

அந்த காரை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஊத்துக்குளி ரயில்வே மேம்பாலத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி, டிரைவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த கார்
மாவட்ட கவுன்சிலருடையது என தெரிய வந்தது.இதையடுத்து, காரை ஓட்டி வந்த நபரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பொம்முடி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் சிங்காரவேலன் (23) என தெரிய வந்தது.இவருக்கு உடந்தையாக இருந்த சுரேஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

2013ம் ஆண்டுக்கான பட்டியல் தயாராகிறது வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை முழுமையாக செயல்படுத்த வேண்டும்


திருப்பூர், : திருப்பூர் தெற்கு தொகுதி புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ், புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியினை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

 திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் வெங்கடாசலம், துணை வட்டாட்சியர்(தேர்தல்) சுப்ரமணியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 
பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் பேசுகையில், ‘திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 206 வாக்குச் சாவடி மையங்களில் உள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், 2013ம் ஆண்டிற்குண்டான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியினை பொறுப்புடனும், முழு ஈடுபாடுடனும் செயல்பட்டு பணியாற்றிட வேண்டும். மற்ற நகரங்களைவிட திருப்பூர் மாநகரில் மக்கள் அடிக்கடி இடம் மாறுவது உண்டு. முறையான படிவங்களை அவர்களிடம் அளித்து பெயர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்துதல்  போன்ற பணிகளை சிறப்புடன் செயலாற்ற வேண்டும். வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்பு நலச் சங்கங்களை அணுகி வாக்காளர் பட்டியலை படித்து காண்பிக்க வேண்டும். 
புதிய வாக்காளர் பெயர் சேர்ப்புடன் அவர்களுக்கு புதிய வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையும் பெற்றுத் தர வேண்டும். மேலும், உள்ளுர் மக்களிடம் நல்ல நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும், வழிகாட்டியாகவும் இருந்து தேசிய நலனை காக்கின்ற புற வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியினை  100 சதவீதம் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்,’’ என்றார்.
 தொடர்ந்து நடந்த பயிற்சி முகாமில், பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக விளக்கப்பட்டது. இந்த முகாமில் 60க்கும் அதிகமான நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கேஸ் பைப் லைன் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்': விவசாயிகள் குழு வலியுறுத்தல்

பெங்களூரு கேஸ் பைப் லைன் திட்டத்தை, விவசாய நிலங்கள் தவிர்த்து, மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு குழு சார்பில், பெட்ரோலிய துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கெய்ல் நிறுவனம் சார்பில், கொச்சி,பெங்களூரு கேஸ் பைப் லைன் திட்டம், தமிழகம் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதால், மாற்று வழியில், இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு குழு சார்பில், பெட்ரோலிய துறை அமைச்சரிடம்,கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மனுவில் தெரிவித்திருப்பதாவது:கொச்சி, பெங்களூரு கேஸ் பைப் லைன் திட்டம், தமிழத்திலுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம், ஏழு மாவட்டங்களிலுள்ள 136 கிராமங்களின், 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், பத்தாயிரம் விவசாயிகள், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர்.கேஸ் பைப் லைன் திட்டத்தினால், மூன்று ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களை இழக்க நேரிடும்; வேறு இடத்துக்கு மாற வேண்டிய நிலையுள்ளது. இத்திட்ட பாதையில், தேங்காய், மாம்பழம், சப்போட்டா போன்ற நீண்டகால, பயன் தரும் பழ வகைகளை விவசாயிகளால், பயிரிட முடியாது. எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்பட்டால், விவசாயிகளே பொறுப்பேற்க வேண்டிய நிலை உள்ளது.விபத்துக்கான இழப்பீடுகள் குறித்தும், தெரிவிக்கப்படாமல் உள்ளது. சிறிய விவசாயிகள், தங்கள் நிலங்களை விற்கக் கூட முடியாமல், மிகவும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.கெய்ல் நிறுவனத்தினர், போலீஸ் உதவியுடன், விவசாய நிலங்களில் கேஸ் பைப் லைன் அமைக்கின்றனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், மேற்கு வங்க மாநிலத்திலுள்ள, நந்திக் கிராமம் போல், தமிழகம் மாறுவதை அனுமதிக்க முடியாது என, கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனவே, விவசாய நிலங்களை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலை அல்லது ரயில்வே போன்ற, மாற்று வழியில், இத்திட்டத்தை செயல்படுத்தி, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Monday 6 August 2012

கோபி அருகே மேவாணியில் ஒரு மாதமாக கேட்பாரற்று நின்ற லாரி போலீஸ் விசாரணை


கோபிசெட்டிபாளையம்,  அருகே மேவாணியில் ஒரு மாதமாக கேட்பாரற்று நின்ற லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த லாரியை யாராவது கடத்திக்கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்று விட்டனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேட்பாரற்று நின்ற லாரி

கோவையில் சீருடையில் சென்று கைவரிசை காட்டினார்: சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர் போல நடித்து ரூ. 65 ஆயிரம் மோசடி செய்தவர் கைது


கோவையில் சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர் போல நடித்து ரூ. 65 ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி மிரட்டினார்

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

கோவையில் அவினாசி சாலை கந்தசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 30). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் மூலம் இரு சக்கர மோட்டார் சைக்கிள் ஒன்று புதிதாக வாங்கினார். அவர் தன்னை சி.பி.ஐ. போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுவதாக கூறினார். சீனிவாசன் 4 மாதங்கள் கழித்து அந்த மோட்டார் சைக்கிளை எக்ஸ்சேஞ்ச் மேளாவில் கொடுத்து ரூ. 30 ஆயிரம் வாங்கிக் கொண்டார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவர் வீடு திரும்பினார். உடனே எக்ஸ்சேஞ்ச் மேளா நடத்தியவர்கள் பணத்தையும் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளையும் எடுத்து செல்கிறீர்களே என்று கேட்டனர்.

திருப்பூர், நகை கடையில் திருடிய மூன்று பேர் கைது:

நகை கடையில் திருடிய மூன்று பேர் கைது: திருப்பூர், காங்கயம் கிராஸ் ரோட்டில் ஜூவல்லரி வைத்திருப்பவர் சபீர்; இவரது கடைக்கு வந்த, நிலக்கோட்டை ஆவாரம்பட்டியை சேர்ந்த காந்தி மனைவி வசந்தா 32; மொக்கை மனைவி பிச்சையம்மாள் 30; சின்னச்சாமி மனைவி கருப்பாயி 30 ஆகியோர், 60 ஆயிரம் மதிப்புள்ள ஆறு சவரன் தங்க நகைகளை திருட முயன்றனர். கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறையில்அடைத்தனர்.

கல்குவாரி புழுதியால் குழந்தைகள் பாதிப்பு கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

வேண்டும்,' என திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் இயங்கும் விகாஸ் வித்யாலயா பள்ளிக்கு மிக அருகில், கருங்கல் ஜல்லி கல்குவாரி செயல்பட்டு வருகிறது. "கிரஷர்' குவாரியில் இருந்து எழும் புழுதியால், பள்ளி மாணவ, மாணவியர் பாதிப் படைகின்றனர். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், கல்குவாரியின் உரிமத்தை புதுப்பிக்கக் கூடாது எனவும் பெற்றோர்கள், கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.இந்நிலையில், வெள்ளியங்கிரி என்பவர், அப்பள்ளியில் படிக்கும் தனது குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோரின் கோரிக்கைகளை

Saturday 4 August 2012

திருப்பூரில் இலவச அமரர் ஊர்தி சேவையை பெற


 திருப்பூரில் இலவச அமரர் ஊர்தி சேவையை பெற 155377 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என சுகாதாரத் துறை இணை இயக்குநர் (மருத்துவம்) ஜி.திருமலைசாமி தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இம் மருத்துவமனைக்கு ரூ.2 கோடியை அரசு வழங்கி உள்ளது. இந் நிதி மூலமாக மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடத்தின் மேல்தளத்தில் புதிதாக கட்டடம் கட்டப்படும். இதில், மகப்பேறு வெளிநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு செயல்படும். திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 12 உள்ளன. கூடுதலாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் உயர்தர பாதுகாப்பு சாதனங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட உள்ளது. விபத்தில் அடிபட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துவர 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் யன்படுத்தப்படுவதுபோல், விபத்தில் இறந்தவர்களை எடுத்துச் செல்ல இலவச அமரர் ஊதி வாகனங்கள் அரசால் ழங்கப்பட்டுள்ளன. திருப்பூர், தாராபுரம், உடுமலை ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு தலா ஒரு இலவச அமரர் ஊர்தி வாகனம் அளிக்கப்பட்டுள்ளன. இச் சேவையை பயன்படுத்த விரும்புவோர் "155377' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் கேன்சர் ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தொற்றா நோய் சிகிச்சைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனை செய்து, அட்டை வழங்கப்படும். இம் மருத்துவமனைக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே, சிறுநீரக டயாலிஜிஸ் ஆகிய வசதிகள் விரைவில் செய்துதரப்படும். மடத்துக்குளத்தில் தாலுகா அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

திருப்பூரில்டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணிமனை

திருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில், டிரான்ஸ்பார்மர் சிறப்பு பராமரிப்பு பணிமனை திறக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மின்வாரிய பகிர்மான வட்டத்தில், திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம் ஆகிய கோட்டங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்தால், கோவை தலைமை மின்வாரிய நிலையத்தில் உள்ள சிறப்பு பராமரிப்பு பணிமனைக்கு அனுப்பப்பட்டன. அங்கு பழுதை சரி செய்து அனுப்ப, இரண்டு நாட்களாகும். பழுதை சரி செய்ய, அங்கு டிரான்ஸ்பார்மர்கள் அதிகமாக இருந்தால், மேலும் ஒரு நாளாகும். இப்பணிக்காக இரண்டு பணியாளரும் உடன் செல்ல வேண்டும். இதனால், பணிகள் பாதிப்பதோடு, ஊழியர்கள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். அதனால், திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், டிரான்ஸ்பார்மர் சிறப்பு பராமரிப்பு பணிமனை புதிதாக அமைக்கப்பட்டது. கோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேலு நேற்று திறந்து வைத்தார். திருப்பூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா, செயற்பொறியாளர் பிரேமலதா மற்றும் உதவி செயற்பொறியாளர், பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

மாவட்டம் முழுவதும் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி : தொடர்கிறது, குழந்தை தொழிலாளர் முறை


திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், கடை கள், வர்த்தக நிறுவனங்களில் குழந்தைகள் பணியாற்றுகின்றனரா என ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் 23 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இதனால், அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தொடர் கண்காணிப்பையும் மீறி, குழந்தைகளை தொழிற்சாலைகளில் பணிக்கு அமர்த்துவதால், நடவடிக்கையை 
கடுமையாக்க திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் பகுதி, பனியன் தொழிலுக்கும்,சுற்றுப்பகுதிகள், நூல் மில் மற்றும் விசைத்தறி தொழிலுக்கும் பிரசித்தி பெற்றது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். வறுமை காரணமாக, சிலர், தங்களது குழந்தைகளையும் வேலைக்கு அனுப்புகின்றனர். சிறு வயதில் வேலைக்கு செல்லும் சிறுவர்கள், கல்வியை இழப்பதோடு, எதிர்காலத்தையும் சேர்த்து தொலைத்து விடுகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தேசிய குழந்தை தொழில் ஒழிப்பு திட்டம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. திட்ட அலுவலர்கள், வருவாய்த்துறை, தொழிலாளர் துறை, தொழிற்சாலைகள் துறை, மருத்துவ துறை மற்றும் போலீசார் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, பகுதி வாரியாக தொழிற்சாலைகள், மில்கள், ஓட்டல்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அடிக்கடி ஆய்வு நடத்தப்படுகிறது.ஆய்வில், 14 வயதுக்கு கீழுள்ள சிறுவர்களை பணி அமர்த்துவது கண்டறியப்பட்டால், அவர்களை மீட்டு, சிறப்பு பள்ளி அல்லது முறையான பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது. சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இக்குற்றத்துக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும்.
இக்கமிட்டி ஆலோசனை கூட்டம், மாதந்தோறும் நடக்கிறது. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு குழுவுக்கு அடுத்தபடியாக, விரைந்து பணியாற்றும் வகையில் தாலுகா அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டன. தாலுகா வாரியாக அமைக்கப்பட்ட குழுக்கள், கடந்த ஒரு மாதத்தில் பல பகுதி
களில் ஆய்வு நடத்தின. இதுவரை 33 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 23 பேர் குழந்தை தொழிலாளர்கள்.
கடந்த 23ம் தேதி, திருப்பூரில் இரண்டு பனியன் நிறுவனங்களில் மீட்கப்பட்ட 12 பேரில் 9 பேரும், நேற்றுமுன்தினம் பல்லடம் சித்தம்பலத்தில் உள்ள ஒரு மில்லில் மீட்கப்பட்ட 14 பேரில் 7 பேரும் குழந்தை தொழிலாளர்கள் என்பது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 23 ஆக உள்ளதுகுழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் செயல்படும் வேளையில், இதுபோன்ற சம்பவங்கள், திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் குழந்தை தொழிலாளர் முறை முற்றிலும் மறையவில்லை என்பதையே காட்டுவதாக உள்ளது. இது, அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குழந்தை தொழில் ஒழிப்பு திட்ட இயக்குனர் விஜயகுமார் கூறியதாவது:மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் ஒருங்கிணைந்த ஆய்வு நடந்தது. மீட்கப்பட்ட 10 சிறுவர், 13 சிறுமியரில், திருப்பூரை சேர்ந்த 3 பேரும், தாராபுரத்தில் ஒரு சிறுவனும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆந்திராவைச் சேர்ந்த 4 பேரும், வெளிமாவட்டங்களை சேர்ந்த 15 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோர் உறுதி அளித்துள்ளனர். தொடர்ந்து அவர்களை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தரப்பட்டுள்ளது. பணி அமர்த்திய நிறுவனங்கள் மீது தொழிற்சாலை துறையினர், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளனர், என்றார்.


கொத்தடிமையாக நடத்த முயற்சியா?



                         பெற்றோரிடம் தலா 2,000 ரூபாய் கொடுத்துவிட்டு, பீகாரில் இருந்து திருப்பூருக்கு அழைத்து வரப்பட்ட 16 சிறுவர்களை வடக்கு போலீசார் நேற்றிரவு மீட்டனர்.பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்த லட்சுமண் மற்றும் சஞ்சய் ஆகியோர், திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழிலாளர்களை அழைத்து வரும் புரோக்கர்களான இவர்கள், வறுமையில் வாடும் குடும்பங்களை சேர்ந்த 16 சிறுவர்களை, திருப்பூர் அழைத்து வந்துள்ளனர். பெற்றோர்களிடம் தலா 2,000 ரூபாய் கொடுத்துவிட்டு, திருப்பூருக்கு அழைத்துச் செல்வதாக கூறி, சென்னை - மங்களூரு ரயிலில் அழைத்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 11.54 மணிக்கு, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கி, காதர்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமண் என்பவர் அறையில் 16 சிறுவர்களையும் தங்க வைத்துள்ளனர். திருப்பூரில் உள்ள கம்பெனிகளுக்கு வேலைக்கு அனுப்பி, அதன் மூலமாக வருவாய் பெறவும் புரோக்கர்கள் இருவரும் திட்டமிட்டுள்ளனர்."பேச்பன் பேச்சோ ஆன்டோலென்' என்ற, பீகாரில் உள்ள குழந்தைகள் நல தன்னார்வ அமைப்பு, திருப்பூரில் உள்ள கிளை நிர்வாகிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளது. தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் கொடுத்த புகார் அடிப்படையில், திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று, அங்கிருந்த 16 சிறுவர்களையும் அழைத்து வந்தனர். அவர்களில், ஒன்பது பேர் 14 வயதுக்கு குறைந்தவர்கள் என்பதும், ஏழு பேர் 15 வயதுக்கும் அதிகமானர்வர்கள் என்பதும் தெரியவந்தது."பெற்றோரிடம் காசு கொடுத்து அழைத்து வந்து, திருப்பூரில் கொத்தடிமைகளாக வைத்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, கொத்தடிமைகள் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள், போலீசிடம் வலியுறுத்தி உள்ளனர். 16 பேரையும் மீட்டு வந்த போலீசார், சம்பந்தப்பட்ட புரோக்கர்களையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thursday 2 August 2012

மின்வாரியத்தில் எலக்ட்ரீசியன் மற்றும் ஒயர்மேன் பணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு துறை மூலம் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளன


:மின்வாரியத்தில் எலக்ட்ரீசியன் மற்றும் ஒயர்மேன் பணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு துறை மூலம் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளன.மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் டேவிட்ராஜா அபிஷேக ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:மின்வாரியத்தில் நிரப்பப்படும் எலக்ட்ரீசியன் மற்றும் ஒயர்மேன் பணியிடங்களுக்கு, திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு துறை மூலம் கீழ்க்காணும் தகுதியுடைய பதிவுதாரர்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளன. நாளைக்குள் (ஆக. 3), தங்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என்பதை பதிவுதாரர்கள் நேரில் வந்து பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.எலக்ட்ரீசியன்: கல்வித்தகுதி - 10ம் வகுப்பு  ஐ.டி.ஐ., (எலக்ட்ரீசியன்) தேர்ச்சி. வயது வரம்பு - பி.சி., - எம்.பி.சி., மற்றும் பி.சி., (எம்) - 32. பொதுப்பிரிவு - 30. எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., (எ) - 35.ஒயர்மேன்: கல்வி தகுதி - 10ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ., (ஒயர்மேன்) தேர்ச்சி. வயது வரம்பு - பி.சி., - எம்.பி.சி., - 32. பொதுப்பிரிவு - 30. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., - 35. உத்தேச பதிவு மூப்பு (மாநில அளவில்), பொதுப்பிரிவினர் (முன்னுரிமை இல்லாதோர்) பி.சி., - எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., 2001, டிச., 26. பி.சி., (எம்) - 2005, ஜூன் 28. எஸ்.சி., (எ) - 2012, ஜன., 27. எஸ்.டி., - 2008 அக்., 10. பெண்கள்: முன்னுரிமை இல்லாதோர் - பி.சி.,- எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., - 2012, ஜூலை 13. முன்னுரிமை பெற்ற, ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர், குடும்பத்தார் ஆகியோருக்கு, 2012, ஜூலை 30 வரை பதிவு செய்தோர். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பனியன் உற்பத்தி பணிகளுக்கு தொழிலாளர்கள் இல்லாததால் தொழில் துறையினர் கவலை

பனியன் உற்பத்தி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால், திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூர் பின்னலாடை தொழில் கடந்த 2009ம் ஆண்டு இறுதியில் இருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்திக்க தொடங்கியது. நூல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என பல்வேறு பிரச்னைகளை தாண்டி கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ந்தேதி சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் திருப்பூரில் பூஜ்ய சதவீத முறையில் சாய கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாத சாயப்பட்டறைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் வெளியிடங்களை நோக்கி திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் செல்லத்தொடங்கினர்.
சாய,சலவைப்பட்டறைகள் மூடப்பட்டபின்னர் அதை நம்பியிருந்த பனியன் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் அனைத்தும் மெல்ல, மெல்ல ஆர்டர்கள் இல்லாமல் வேலை இன்றி காணப்பட்டன. இதனால் தொழிலாளர்களுக்கு ஷிப்டு முறை பணிகள் குறைந்தன. தங்களுக்கு தேவையான கூலியை பெற முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர்.
மேலும் இந்த ஆண்டில் தொடர் மின் தடை, மின் கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற பிரச்னைகள் திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு சோதனையாக அமைந்தன.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஆர்டர்கள் வரத்து குறைந்தது. இதனாலும் பின்னலாடை உற்பத்தி பணிகள் குறைந்தன. கடந்த ஆண்டை விட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள பின்னலாடை ஏற்றுமதி குறைந்தது.
பல்வேறு போராட்டங்களுக்கு இடையிலும், பூஜ்ய சதவீத முறையில் இயங்க தயாராக இருந்த தனி மற்றும் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. இதனால் அந்த நிலையங்கள் இயங்கத்தொடங்கின.
ஆண்டுதோறும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் வழக்கமாக வெளிநாட்டு ஆர்டர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி மற்ற ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்களை திருப்பூர் தொழில் துறையினர் பெறும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூரில் பனியன் உற்பத்தி பணிகள் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பனியன் உற்பத்தி செய்ய தற்போது போதிய ஆட்கள் இல்லாததால் திருப்பூர் தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால், சுமார் 40 சதவீத தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி சென்றுவிட்டனர். பள்ளிகளில் படித்து வந்த தங்கள் குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழ்களை பெற்று வெளியூர் சென்றுள்ள தொழிலாளர்கள் திருப்பூரில் பல ஆயிரங்களை தாண்டும்.
பனியன் உற்பத்தி பணிகள் தொடங்கியுள்ள சூழ்நிலையில் தொழிலாளர்கள் கிடைக்காமல் தொழில் துறையினர் தவித்து வருகின்றனர். இது குறித்து பனியன் உற்பத்தியாளர்கள் கூறுகையில்,
தற்போது திருப்பூர் பனியன் உற்பத்தி தொடங்கியுள்ள சூழ்நிலையில் எங்களுக்கு தொழிலாளர்கள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். பனியன் ஆர்டர்களை குறித்த நேரத்தில் தயாரித்து அனுப்பவேண்டும். இதற்காக கூடுதல் ஆட்கள் தேவைப்படுகின்றனர். இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைய ஆட்கள் தேவைப்படுவார்கள். இதற்காக வெளியூர்களுக்கு சென்றுள்ள தொழிலாளர்களை மீண்டும் திருப்பூருக்கு வாருங்கள் என்று மொபைல் போன் மூலம் பேசி வருகிறோம், இவ்வாறு அவர்கள் கூறினர்.