போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 15 August 2012

பாறைக்குழியால் குழந்தைகளுக்கு ஆபத்து

திருப்பூர் அருகே கொளத்துப்பாளையம் ரோட்டின் ஓரத்தில் பெரிய பாறைக்குழி உள்ளது. இவ்வழியாக 10க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் செல்வதால், மாணவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இக்குழியை மூட, நடவடிக்கை எடுக்கும்படி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் கொளத்துப்பாளையம் பிரிவு ரோடு உள்ளது. அங்கிருந்து பாரப்பாளையம் செல்லும் வழியில், பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டிலி தோட்டத்தில், பெரிய பாறைக்குழி உள்ளது. இந்த ரோட்டின் வழியாக, அரசு டவுன் பஸ் ஆறுமுறையும், மினி பஸ் நான்கு முறையும், 10க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களும், லாரிகளும் வந்து செல்கின்றன. ரோட்டின் ஓரத்திலேயே பாறைக்குழி இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், இப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.பொட்டிலி தோட்டம் பகுதி மக்கள் கூறியதாவது:
பாறைக்குழி உள்ள ரோட்டின் வழியாக காலையிலும், மாலையிலும் பள்ளி வாகனங்கள் வந்து செல்கின்றன. காலை நேரத்தில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, பள்ளி துவங்கும் முன் செல்ல வேண்டும் என்று டிரைவர்கள் வேகமாக ஓட்டிச் செல்கின்றனர். ரோட்டிலிருந்து மூன்றடியில் 20 அடி ஆழமுள்ள பெரிய பாறைக்குழி உள்ளது.
எவ்வித பாதுகாப்பு தடுப்பும் இல்லை. பொட்டிலி தோட்டத்தில் இருந்து, ஊத்துக்குளி மெயின் ரோட் டுக்கு வரும் வழியில் உள்ள வளைவில், வாகனத்தை திருப்பத் தவறினால், நேராக பாறைக்குழிக்குள் விழக்கூடிய வகையில் உள்ளது. வேகமாகச் செல்லும் பள்ளி வாகனங்களும், பஸ்களும், ஒவ்வொரு முறையும் இப்பாறைக்குழியை கடந்து செல்லும் வரை, எங்களுக்கு நிம்மதி இருக்காது.ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் வாகனங்கள், இரவில் இவ்வழியாக அசுர வேகத்தில் செல்கின் றன. பாறைக்குழியால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகம் முயற்சி எடுத்து, பாறைக்குழியை மூட ஏற்பாடு செய்ய வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment