போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday 3 December 2013

திருப்பூர்:உங்கள் பகுதியில் மின் வெட்டு எப்போது?

திருப்பூர்:மின் பற்றாக்குறையை சமாளிக்க, திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தினமும் நான்கு மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. அதற்கான நேரங்களை, மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.

மின் பற்றாக்குறை காரணமாக மீண்டும் மின் வெட்டு படிப்படியாக அதிகரித்து வருகிறது. தினமும், எட்டு மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வந்ததோடு, அடிக்கடி ஏற்பட்டு வருவதால் தொழில் துறையினரும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வந்தனர். தொழில் துறையினரும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதால், மின் வெட்டு நேரத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தினர்.

Monday 15 July 2013

ஏழு ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம்; தமிழகத்தில் முதல் முறையாக சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் துவக்கம்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, ஒலப்பாளையத்தில் சென்னை சில்க்ஸ் மற்றும் “டாடா பவர்” நிறுவனங்களின் சார்பில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் தனது செயல்பாட்டை ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

 இதன் துவக்க விழாவில் பங்கேற்று, டாடா சோலார் பவர் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் பி.அருள்குமார் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பேசும்போது, தமிழகத்தின் மின் தேவை மிக அதிகமாக உள்ளது. தற்போது நிலக்கரியின் மூலமே 80 சதவீத அளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த 50 ஆண்டுகளில் நிலக்கரி போன்ற கனிம வளங்கள் பூமியில் குறைந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாற்று வழியில் மின் சக்தியை உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

Wednesday 26 June 2013

முறைகேடாக மின்சாரம் பயன்பாடு: பறக்கும் படையினர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூரில், மின்வாரிய பறக்கும் படையினர் நடத்திய ஆய்வில், புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்துக்கு 3.58 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்துவதை கண்டறிந்து, அபராதம் விதிக்கும் வகையில், மின் வாரிய பறக்கும் படை மற்றும் முன்னாள் ராணுவத்தினரை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு, திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மின்வாரிய ஊழியர்களுக்கே தெரியாமல், திருப்பூரில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய ஆய்வில், மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிரே, புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்துக்கு தற்காலிக இணைப்பு பெறாமல், அருகில் உள்ள கட்டடத்தில் இருந்து 10 கிலோ வோல்ட் வரை முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை கண்டறிந்து, மூன்று லட்சத்து 58 ஆயிரத்து 934 ரூபாய் அபராதம் மற்றும் 40 ஆயிரம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் வணிக மின் இணைப்பு பெற்று, வீடுகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளதும் தெரியவந்தது.

Monday 10 June 2013

திருப்பூரில் தரைமட்ட பாலம் அமைப்பதை எதிர்த்து வழக்கு

திருப்பூரில் தரைமட்ட மேம்பாலம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக லோக் சத்தா கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் செ. ஈஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

Sunday 26 May 2013

பெற்றோர் திட்டியதால் வீட்டு விட்டு வெளியேறி பஸ்சில் பரிதவித்த சிறுமி: போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

திருப்பூர், மே. 25-

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகேயுள்ள வெள்ளைய கவுண்டன்புதூர் குட்டைகாடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். கோவில் அர்ச்சகராக உள்ளார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் கோவையில் உள்ள மருதமலையில் பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறாள். 2-ம் பெண் குழந்தைகள் என்பதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

மின்வெட்டு நேரம் குறைந்தும் பயனில்லை : தாழ்வழுத்த மின் சப்ளையால் அவதி


திருப்பூர்:காற்றாலை மின்சாரம் கை கொடுப்பதால், மின்வெட்டு நேரம் வெகுவாக குறைந்துள்ளது. அதேநேரத்தில், மின்னழுத்தம் குறைவு காரணமாக, கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, மின் உபகரணங்கள் பழுதாவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், பனியன் நிறுவனங்கள், ஆயில், அரிசி, இயந்திர உற்பத்தி தொழிற்சாலைகள், வணிகம் மற்றும் வீட்டு மின் இணைப்புகள் என ஐந்து லட்சம் இணைப்புகள் வரை உள்ளன. தினமும் சராசரியாக 500 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மின் பற்றாக்குறை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக, தொழில் துறையினர் மட்டுமின்றி, பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.கடந்த இரு வாரங்களாக, காற்றாலை மின்னுற்பத்தி கிடைப்பதால், மின்வெட்டு நேரம் வெகுவாக குறைந்துள்ளது. சில நாட்கள் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்தது. தொழில் துறையினரும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்திருந்த நேரத்தில், கடந்த சில நாட்களாக தாழ்வழுத்த மின் வினியோகம் காரணமாக, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இயந்திரங்களை இயக்கமுடியாமல், ஜெனரேட்டர்களையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் துறையினரும், வீடுகளில், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு போதிய மின்சாரம் கிடைக்காமல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெண்களும் தெரிவித்தனர். "பீக் அவர்ஸ்' எனப்படும், மாலை 6.00 முதல் 9.00 மணி வரை, மிகவும் குறைந்தழுத்த மின்சாரம் மட்டுமே சப்ளையாகிறது; அதனால், மின் உபகரணங்கள் பழுதாகி வருகின்றன.

Sunday 19 May 2013

மின்சார கட்டுப்பாடுகளை தளர்த்த சாய ஆலை சங்கத்தினர் கோரிக்கை


திருப்பூர்:"காற்றாலை மின்னுற்பத்தி அதிகரித்துள்ளதால், உயரழுத்த மின்சார பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்,' என, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இச்சங்க தலைவர் நாகராஜன், தமிழக மின்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம்:சில நாட்களாக, காற்றாலை மின்னுற்பத்தி கணிசமான அளவு உயர்ந்து, தொழில் துறையினருக்கு உதவி வருகிறது. வரும் ஆறு மாதங்களுக்கு மின்னுற்பத்தி அதிகரித்து, உயரழுத்த மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு சீரான மின் வினியோகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 3,000 முதல் 3,500 மெகாவாட் வரை மின்னுற்பத்தி நடக்கிறது. எனினும், உயர் மின்னழுத்த இணைப்பில் தேவையான அளவுக்கு மின்சாரம் பயன்படுத்த முடிவதில்லை.மொத்த தேவையில், 60 சதவீதத்தை மட்டுமே பெற வேண்டும்; மொத்த மின்திறனில் 60 சதவீதத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்; மாலை 6.00 முதல் இரவு 10.00 மணி வரை, உயரழுத்த மின்பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இக்கட்டுப்பாடுகளால், உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக பெற முடியவில்லை. காற்றாலை மின்னுற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என மின்வாரியம் நெருக்கடி தருகிறது. இதனால், முழு நேர மின்வினியோகம் இருந்தாலும், தடை செய்யப்பட்ட நேரத்தில், ஜெனரேட்டர் மூலம் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.மின்சாரம் இருக்கும் நேரங்களில், உயரழுத்த மின்சாரத்தை தேவையான அளவுக்கு பயன்படுத்தவும், உற்பத்தி குறையும்போது, 20 சதவீதம் பயன்பாட்டை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்தி சீரான தருணங்களில், மாலை நேர மின்கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும், என, அக்கடிதத்தில் கூறியுள்ளார்.


Sunday 12 May 2013

ஈரோடு - பாலக்காடு இடையே நீட்டிப்பு செய்யப்பட்ட பயணிகள் ரயில் சேவை துவங்கியது.


ஈரோடு - பாலக்காடு இடையே நீட்டிப்பு செய்யப்பட்ட பயணிகள் ரயில் சேவை துவங்கியது.

கேரள மாநிலம், பாலக்காடு - கோவை இடையே பயணிகள் மின்தொடர் ரயில் (இன்ஜின் மட்டும்) சேவை இருந்தது. அந்த ரயிலை, ஈரோடு வரை நீட்டிக்க வேண்டும், என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, இன்று முதல் (12ம் தேதி), ஈரோடு - பாலக்காடு இடையே, எட்டு பெட்டிகளுடன், பயணிகள் ரயில் சேவை காலை, 11.20 மணிக்கு துவங்கியது.சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுஜாதா ஜெயராஜ், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி ஆகியோர் நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில் சேவையை துவக்கி வைத்தனர்.பின், கோட்ட மேலாளர், சுஜாதா ஜெயராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும். வாகனங்கள் நிறுத்தும் இடம், பூங்கா, பஸ் நிறுத்தம், முகப்பு விளக்குகள், பழுதான கட்டிடங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் செய்யப்படும். இரண்டு லிஃப்ட் அமைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது.தானியங்கி நடைபாதை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. ஈரோடு - பழனி இடையே ரயில் சேவை குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது. காட்பாடி - சேலம் இடையிலான ரயில் சேவையை, ஈரோடு வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும், என்றார்.ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில்வே அட்டவனைப்படி, நாளை (12ம் தேதி) முதல், பாலக்காட்டில் இருந்து மதியம், 2.30 மணிக்கு புறப்பட்டு, இரவு, 7 மணிக்கு ஈரோடு வந்தடைகிறது.பின், ஈரோட்டில் இருந்து காலை, 7.45 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு பாலக்காட்டுக்கு சென்றடைகிறது. வாரத்தில், வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களுக்கு, தினமும் பயணிகள் ரயிலாக இயக்கப்படும், என்றனர்.சேலம் கோட்ட ஏ.எஸ்.சி., ஆனந்தராஜ், ரயில்வே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவநேசன் உட்பட பலர் பங்கேற்றனர்

Thursday 11 April 2013

திருப்பூர் : துணை மின் நிலையத்தில் "ஸ்கேடா ' மைய பணிகள் தீவிரம்


           திருப்பூர், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில் அமைக்கப்படும், நவீன "ஸ்கேடா' தொழில் நுட்ப மையத்திற்கான, இயந்திரங்கள் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டு, அவற்றை  பொருத்தும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில், 30 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு மேல் உள்ள நகரங் களில், மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டத்தின் கீழ், செயற்கைக்கோள்  உதவியுடன், முழுவதும் கம்ப்யூட்டர்  மயமாக்கப்பட்ட, அதிநவீன தொழில் நுட்பத்தில் "ஸ்கேடா'  (மேல்  கட்டுப்பாடு மற்றும் விவரங்கள் சேகரித்தல் மற்றும் பகிர்மான மேலாண்மை  திட்டம்) மையம் அமைக்கப்படுகிறது. "ஸ்கேடா' மையத்தின் மூலம் மின் பகிர்மானம், மின்கசிவு, மின் துண்டிப்பு, மின் இழப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் கண்காணிக்க முடியும்; ஒவ்வொரு மின் பாதையிலும் பயன் படும் மின் அளவும், ஒவ்வொரு மின் நுகர்வோர் பயன்படுத்தும் மின்  அளவீடும் தெரிந்துகொள்ள முடியும். "ஸ்கேடா' மையத்திலிருந்து, நவீன தொழில் நுட்பத்தின் மூலம், மின் "ரீடிங்' எடுத்து, பில் அனுப்பவும் முடியும். மின் பாதைகளில் ஏதாவது தடங்கல், துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக  "அலர்ட்' தகவல் கிடைப்பதோடு,  சரியான இடத்திற்கு உடனே சென்று, அதனை சீராக்கவும் இந்த தொழில்  நுட்பம் உதவுகிறது. திருப்பூர், மின் பகிர்மான வட்டத்துக்கு, சீனாவை சேர்ந்த நிறுவனத்தின் மூலம், நவீன தொழில் நுட்ப மையம், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில் அமைக்கப்படுகிறது. அதிகாரிகள் கூறியதாவது: கட்டுமான பணி முடிந்து, தளவாடங்கள் பொருத்தும் பணி நடந்து வருகின்றன.  பெல்ஜியத்திலிருந்து, மையத்துக்கான இயந்திரங்கள் வந்துள்ளன. அந்நாட்டின் பொறியாளர்கள், இயந்திரத்தை பொருத்தி வருகின்றனர்; இம்மாத இறுதிக்குள் பணி நிறைவடையும், என்றனர்.

Wednesday 10 April 2013

திருப்பூர் ஆர்வம் காட்டாத மின் நுகர்வோர் வீணாக இருக்கும் தகவல் மையம்


திருப்பூர், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள, தகவல் மற்றும் புகார் மையத்தை அணுக மக்கள் ஆர்வம் காட்டாததால், அத்திட்டம் வீணாகி வருகிறது.

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோருக்கு ஏற்படும் மின் சேவை குறைபாடுகளை தெரிவிக்கவும், புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட தகவல்களை பெறவும், மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில், தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இம்மையத்தில், சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்; காலை 10.00 முதல் 1.00 மணி வரை, இம்மையம் செயல்படுகிறது. மையம் அமைத்து நான்கு மாதங்களாகியும் சொற்ப அளவிலான மக்களே, இதன் மூலம் பயனடைந்துள்ளனர். மின்நுகர்வோர் ஆர்வம் காட்டாததால், இம்மையம் வீணாகி வருகிறது.

அதிகாரிகளிடம் கேட்ட போது, "தகவல் மையம் அமைத்தும், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இம்மையத்தில் புகார் தெரிவித்தால், உடனடியாக தீர்வு கிடைக்கும். தேவையான தகவல்களும், வழிகாட்டுதல்களும் கிடைக்கும். ஆனால், நுகர்வோர், புரோக்கர்களையும், அருகிலுள்ள மின் பணியாளர்களிடமும் கேட்டு வருகின்றனர். இதனால், நுகர்வோருக்கு செலவுதான் அதிகரிக்கும். தகவல் மையத்தை பயன்படுத்த, மின் நுகர்வோர் முன்வர வேண்டும்,' என்றனர்.

Saturday 6 April 2013

ரயில் கட்டணம் உயர்வு திருப்பூரில் அமலுக்கு வந்தது

திருப்பூர்: ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு, திருப்பூரில் அமலுக்கு வந்தது. கடந்த 1ம் தேதி முதல் உயர் வகுப்பு ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு கட்டணம், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கூடுதல் கட்டணம், தட்கல் கட்டணம், இரண்டாவது வகுப்பு ஏ.சி., மற்றும் மூன்றாம் வகுப்பு ஏ.சி., கட்டணம் உயர்த்தப்பட்டது. திருப்பூரில் இருந்து சென்னை செல்ல, இதுவரை படுக்கை வசதிக்கு 245 ரூபாய்; மூன்றடுக்கு ஏ.சி., 620; இரண்டடுக்கு ஏ.சி., 870; கட்டண உயர்வுக்குபின், படுக்கை வசதிக்கு 255; மூன்றடுக்கு ஏ.சி., 650; இரண்டடுக்கு ஏ.சி., 915. தட்கலில் பதிவு செய்ய, படுக்கை வசதி 345; மூன்றடுக்கு ஏ.சி., 910 மற்றும் இரண்டடுக்கு ஏ.சி., 1,225 ரூபாய். திருப்பதி செல்ல, இதுவரை படுக்கை வசதிக்கு 240; மூன்றடுக்கு ஏ.சி., 600; இரண்டடுக்கு ஏ.சி., 845; கட்டண உயர்வுக்குபின், படுக்கை வசதிக்கு 250; மூன்றடுக்கு ஏ.சி., 635; இரண்டடுக்கு ஏ.சி., 885. இதுவே, தட்கலில் 340, 890 மற்றும் 1,195 ரூபாய். பாட்னா செல்ல, படுக்கை வசதிக்கு 720; மூன்றடுக்கு ஏ.சி., 1,865; இரண்டடுக்கு ஏ.சி., 2,775; கட்டண உயர்வுக்குபின், படுக்கை வசதிக்கு 720; மூன்றடுக்கு ஏ.சி., 1,880; இரண்டடுக்கு ஏ.சி., 2,805; தட்கலில் பதிவு செய்ய 895, 2,240 மற்றும் 3,220 ரூபாய். பெங்களூரு செல்ல, படுக்கை வசதிக்கு 205; மூன்றடுக்கு ஏ.சி., 530; இரண்டடுக்கு ஏ.சி., 755; கட்டண உயர்வுக்குபின், படுக்கை வசதிக்கு 215; மூன்றடுக்கு ஏ.சி., 550; இரண்டடுக்கு ஏ.சி., 780. தட்கலில் பதிவு செய்ய 295, 805 மற்றும் 1,095 ரூபாய்.

Wednesday 3 April 2013

திருப்பூர் மக்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க...பரிசீலனை!"பயோ மெத்தனேசன் பிளான்ட்' அமைக்க திட்டம்


திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் எளிதில் மக்கும் தன்மை கொண்ட குப்பையில் இருந்து எரிவாயு தயாரித்து, அதன் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.திருப்பூர் மாநகராட்சியில் தினமும் 550 மெட்ரிக் டன் அளவுக்கு திடக்கழிவுகள் உருவாகின்றன. அவற்றில், 450 முதல் 500 டன் வரையிலான கழிவுகள் தினமும் சேகரிக்கப்படுகின்றன. 

Sunday 31 March 2013

திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தல்; வேட்பாளர்கள் பெயர் நீக்கம் : தேர்தல் அதிகாரி ஓட்டம் தினமலர்


 திருப்பூரில், மின்வாரிய கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தேர்தலில், வேட்பாளர்கள் பட்டியலில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் சங்கம் முன் நேற்று திரண்டனர். உடனடியாக, தேர்தல் அதிகாரி அங்கிருந்து கிளம்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் குமார் நகரில், தமிழ்நாடு மின்வாரிய திருப்பூர் கோட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் உள்ளது.

                         இச்சங்க தேர்தலில் போட்டியிட நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டன. வேட்பு மனுக்கள் வழங்குவதிலேயே பிரச்னை ஏற்பட்டது. உறுப்பினர்கள் சங்க அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட பின், ஒரு மணி நேரம் தாமதமாக மனுக்கள் வழங்கப்பட்டன. தேர்தலில் போட்டியிட 37 பேர் மனு தாக்கல் செய்தனர். இப்பட்டியல் நேற்று முன்தினம் மாலை, சங்கத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை, அப்பட்டியல் எடுக்கப்பட்டு 11 பேர் கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த உறுப்பினர்கள் அங்கு கூடினர். தேர்தல் அதிகாரி கருணாபூபதியை அணுகியபோது, அவர் எதுவும் பதிலளிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் வந்ததை அறிந்த அவர், சங்க அலுவலகத்தை பூட்டி விட்டு, அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்று விட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சந்திரன் கூறியதாவது: மனு தாக்கல் முடிந்ததும் 37 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால், எந்த முகாந்திரமும் இல்லாமல், 11 பேர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., - பி.எம்.எஸ்., அம்பேத்கர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இச்சங்கங்களை சேர்ந்த நான்கு பேருடன், ஆளும்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் பெயரையும் சேர்த்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது, எங்கள் அமைப்புகளுக்குள் பிளவை ஏற்படுத்தும், ஜனநாயக படுகொலை என கருதுகிறோம். தொடர் நடவடிக்கை குறித்து சங்க மேலிட ஆலோசனைப்படி நடக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்துக்கான முதல்கட்ட தேர்தலே பெரும் பிரச்னைகளுடன் துவங்கியதால், மாற்றுக்கட்சியினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

Tuesday 19 March 2013

மாணவர் எழுச்சி தினறிய திருப்பூர்....

இன்று திருப்பூர் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டமும் அதை தொடர்ந்து திருப்பூரின் பிரதான சாலையான குமரன் சாலையில் நான்கு புற வழிகளையும் அடைத்து எழுச்சிமிகு போராட்டத்தை சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் நடத்தினார்கள். காவல்துறையின் வெற்று மிரட்டல்களை கடந்து அவர்களின் எழுச்சியை கண்டு தினறியது 

காவல்துறை. திருப்பூரின் சமிபக கால நிகழ்வில் மொத்த திருப்பூரும் தினறியது இதுவே முதன் முறையாகும், பொதுமக்களும் மாணவ கண்மனிகளுக்கு ஆதரவாக நின்றது நிச்சயம் இப்போராட்டாங்கள் வெல்லும் என்பதை காட்டியது. என் மன்னின் மைந்தர்கள் இன்று திருப்பூர் மாநகரத்தை தினறடித்தது பெரும் மகிழ்சியே..

Sunday 17 March 2013

தாட்கோ கடன் பெற 30ம் தேதி வரை ஆன்லைனில் அவகாசம்


திருப்பூர்: தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு கடன் பெற, வரும் 30ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்ட அறிக்கை: தாட்கோ மூலம் நிலம் வாங்குதல், மேம்படுத்துதல், தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு, டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மருத்துவமனை அமைத்தல், பெட்ரோல், டீசல், கியாஸ் சில்லரை விற்பனை நிலையம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான சுழல்நிதி, பொருளாதார கடனுதவி, துரித மின் இணைப்பு திட்டம், விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி ஆகியவற்றுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற, இந்து ஆதிதிராவிடர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், 15 லிருந்து 30ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

மின் இணைப்பை விரைவாக வழங்கணும்: மாவட்ட நிர்வாகம் உத்தரவு


திருப்பூர்:"வறட்சியை சமாளிப்பதற்காக அமைக்கப்படும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு, விரைவாக மின் இணைப்புகளை வழங்க வேண்டும்' என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்திலேயே, திருப்பூர் மாவட்டத்தில்தான் குறைவான மழை பெய்துள்ளது. பருவ மழை பொய்த்ததால், சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. வறட்சியை சமாளிக்கவும், கோடை வெயிலில் தடையில்லா குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட அளவில் நடந்த ஆய்வு கூட்டத்தில், மொத்தம் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 1.70 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் வினியோக பணிகளை மேற்கொள்ள <முடிவு செய்யப்பட்டது. குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் கிராமங்களில், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, அதன்மூலமாக தண்ணீர் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டது.

திருப்பூர் அருகே ஊத்துக்குளியில் தொடர் திருட்டு * பொதுமக்கள் அச்சம்


திருப்பூர்: ஊத்துக்குளி அடுத்த நீலக்கோணம்பாளையத்தில், அடிக்கடி திருட்டுகள் நடப்பதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்டது நீலக்கோணம்பாளையம். கயித்தமலை கோவில் அடிவாரத்தில், அமைந்துள்ள இக்கிராமத்துக்கு பல ஆண்டுகளாக இப்பகுதிக்கு பஸ் வசதியில்லை; ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, கயித்தமலை கோவில் மலைப்பாதை வழியாக 3 கி.மீட்டர் நடந்து ஊருக்கு நடந்து செல்ல வேண்டும்.

Tuesday 26 February 2013

400 கிலோவாட் உயர் அழுத்த மின் கம்பிகளில் இருந்து கசியும் மின்சாரம் நிலங்களில் பாய்கிறது தினகரன் செய்தி


கோபி:கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக 400 கிலோவாட் மின்சாரம் வழங்குவதற்காக மின்வாரியம் கடந்த 4 ஆண்டுகளுக்கு அளித்த திட்ட முன்மொழிவுக்கு அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு மேட்டூரில் இருந்து அம்மாபேட்டை, அந்தியூர், கோபி, அவிநாசி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி துணை மின்நிலையத்திற்கு புதிய மின்பாதை அமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. உயரழுத்த மின்சார கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மின்சார டவர்கள் அமைக்கப்பட்டு, மொத்தம் 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 பிரிவுகளாக, ஒவ்வொரு பிரிவிலும் 2 கம்பிகள் கொண்ட மின்பாதை அமைக்கப்பட்டது. 45 மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள டவரில் தரை மட்டத்தில் இருந்து 20 மீ. உயரத்தில் மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பணிகள் முடிவுற்ற நிலை யில் புதிய மின் பாதையில் மின்சாரம் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. 

Saturday 23 February 2013

திருப்பூர்: "பார்கோடிங்' கருத்தரங்கு

 திருப்பூர்: தொழில் நிறுவனங்கள், தங்களது"பார்கோடிங்' பதிவு செய்வது தொடர்பான பயிற்சி கருத்தரங்கு, திருப்பூரில் வரும் 25ல் நடக்கிறது.மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் சார்பில், எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் சார்பில், திருப்பூர் குமார் நகர், கதர் கிராம தொழில்கள் வாரிய வளாகத்தில், "பார்கோடிங்' பயிற்சி கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

கருத்தரங்கு மூலம், பார்கோடிங் குறித்த விளக்கம், பதிவு செய்யும் வழிமுறை, உள்நாடு மற்றும் வெளிநாடு வியாபாரத்தில் பெறும் நன்மைகள், "பார்கோடிங்' பதிவு செய்வதற்கு, மத்திய அரசின் மானிய திட்டங்கள், மானியம் பெறும் வழிமுறை குறித்து விளக்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0422 - 2233 956 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Friday 8 February 2013

மீண்டும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு : தொழில் துறையினர் அதிர்ச்சி


திருப்பூர் :திருப்பூரில் கடந்த இரண்டு மாதமாக மின்வெட்டு நேரம் குறைந்திருந்த நிலையில், மீண்டும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால், தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூரில் நூற்பாலைகள், பின்னலாடை உற்பத்தி, அரிசி, ஆயில் மில்கள், விசைத்தறி, இயந்திரங்கள், பாத்திர உற்பத்தி,கோழி பண்ணைகள், விவசாயம், இயந்திரங்கள் உற்பத்தி என தொழில்கள் அதிகம் உள்ளன. தினமும் சராசரி, 700 முதல் 750 மெகாவாட் வரை, மின்சாரம் தேவைப்படுகிறது.கடந்த இரு மாதங்களாக, நகர பகுதிகளில் இரண்டு மணி நேரம்; கிராம பகுதிகளில் அதிகபட்சமாக நான்கு மணி நேரம் என்ற அளவிலேயே மின்வெட்டு இருந்தது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படாமல், சீராக குறிப்பிட்ட நேரம் மட்டும் ஏற்பட்டதால், பொதுமக்களும், தொழில் துறையினரும் நிம்மதியடைந்தனர்.

Wednesday 23 January 2013

திருப்பூரில் புத்தக கண்காட்சி 37 பதிப்பகங்கள் பங்கேற்பு


திருப்பூர் : பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில், திருப்பூர் கே.ஆர்.சி., சிட்டி சென்டரில் புத்தக திருவிழா, வரும் 25ல் துவங்கி, பிப்., 3 வரை நடக்கிறது; தினமும் மாலை கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 37 பதிப்பகங்கள்; 36 விற்பனையாளர்கள்; 11 மல்டி மீடியா நிறுவனங்கள் பங்கேற்று, 120 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன.
வரவேற்பு குழு தலைவர் சவுக்கத்தலி, செயலாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவ து:

திருப்பூரில், 10 வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. வன்முறை, போதை என சீரழிந்துள்ள சமுதாயத்தை மாற்றவும், மனித மாண்புகளை மீட்கவும், கருத்தியல், சுரண்டலுக்கு எதிராக சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாசிப்பு அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.

திருப்பூரில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து, கடந்தாண்டை விட, 25 பதிப்பாளர்கள் ஆர்வமாக முன்வந்து, பங்கேற்கின்றனர். தினமும் மாலை கருத்தரங்கு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி மற்றும் குறும்படங்கள் வெளியிடப்படும்.

நிகழ்ச்சிகளில், தமிழக அரசின் முதன்மை செயலர் இறையன்பு, அரசு செயலர் தனவேல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன், போலீஸ் டி.ஐ.ஜி., பாரி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, கருத்துரை வழங்குகின்றனர். புத்தக திருவிழாவை, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ஆனந்தனர் திறந்து வைக்கவும், முதல் விற்பனையை மேயர் விசாலாட்சி துவக்கி வைக்கவும் உள்ளனர், என்றனர்.

திருப்பூரில் இருந்து சென்னை செல்ல, படுக்கை வசதி டிக்கெட் ரூ.245


திருப்பூர் : சமீபத்தில் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம், நடைமுறைக்கு வந்துள்ளது. திருப்பூரில் இருந்து சென்னை செல்ல, படுக்கை வசதியுள்ள ஒரு டிக்கெட், 245 ரூபாய்; இது, பழைய கட்டணத்தில் இருந்து 28 ரூபாய் அதிகம். சாதாரண டிக்கெட், 130 ரூபாய்; இது, 22 ரூபாய் உயர்ந்துள்ளது.சமீபத்தில், ரயில் கட்டணத்தை உயர்த்தி, ரயில்வே துறை அறிவித்தது. புறநகர் சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணம் கி.மீ.,க்கு, 2 பைசா, புறநகர் இல்லாத பகுதிகளுக்கு, கி.மீ.,க்கு 3 பைசா உயர்த்தியது. இரண்டாம் வகுப்பு எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், கி.மீ.,க்கு, 4 பைசா, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில்களில் 6 பைசா உயர்த்தப்பட்டது. புதிய கட்டண விகிதங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்களில் பயணிக்க கட்டண விவரம்:

சென்னைக்கு பழைய சாதாரண கட்டணம் 108 ரூபாய்; ரூ.22 அதிகரித்து, 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. படுக்கை வசதி பழைய கட்டணம் 217 ரூபாய்; ரூ.28 அதிகரித்து, 245 ஆகியுள்ளது. மூன்றடுக்கு "ஏசி' பழைய கட்டணம் 572; புதிய கட்டணம் 620; இரண்டடுக்கு "ஏசி' பழையது 845; புதியது 870 என அதிகரித்துள்ளது.

பெங்களூரு செல்ல பழைய சாதாரண கட்டணம் 89; புதிய கட்டணம் 105. படுக்கை வசதி பழையது 178; புதியது 205. மூன்றடுக்கு "ஏசி' பழையது 430; புதியது 530. இரண்டடுக்கு "ஏசி' பழையது 730; புதியது 755 ரூபாய்.
மதுரைக்கு பழைய சாதாரண கட்டணம் 66 ரூபாய்; புதியது 80. படுக்கை வசதி பழையது 140; புதியது 160. மூன்றடுக்கு "ஏசி' பழையது 376; புதியது 445 ஆக உயர்ந்துள்ளது. திருப்பதிக்கு இரவில் செல்லும் அதிவிரைவு ரயிலில் பழைய சாதாரண கட்டணம் 85; புதியது 125. படுக்கை கட்டணம் பழையது 191; புதியது 220. மூன்றடுக்கு "ஏசி' கட்டணம் பழையது 524; புதியது 570. இரண்டடுக்கு "ஏசி' கட்டணம் பழையது 785; புதியது 815 ஆக உயர்ந்துள்ளது. பகலில் செல்லும் ரயிலில் உட்காரும் இருக்கை பழையது 120; புதியது 140. "ஏசி' சேர்கார் பழையது 441; புதியது 485 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூரில் இருந்து சேலத்துக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 55, எக்ஸ்பிரஸ் 45, பாசஞ்சர் 25, ஈரோடு, கோவைக்கு சூப்பர் பாஸ்ட் 40, எக்ஸ்பிரஸ் 30, பாசஞ்சர் 15, மதுரை எக்ஸ்பிரஸ் 80, பாசஞ்சர் 45, திருநெல்வேலிக்கு எக்ஸ்பிரஸ் 115, பாசஞ்சர் 65, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 130, பாசஞ்சர் 75, பாலக்காடு சூப்பர் பாஸ்ட் 55, எக்ஸ்பிரஸ் 45, பாசஞ்சர் 20, பெங்களூரு எக்ஸ்பிரஸ் 95, பாசஞ்சர் 55 என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளியூர்களுக்கு செல்ல, ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கூடுதல் கட்டணம் செலுத்த, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், முன்பதிவு செய்யும் இடத்திலும், தகவல் மையத்திலும், சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், அவ்விரண்டு இடங்களில், கூடுதல் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம், என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மின் தடையா... நடுநிசியிலும் புகார் செய்யலாம்!


 திருப்பூர் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில், "கம்ப்யூட்டரைஸ்டு' மின் தடை நீக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்கள், மின்தடை தொடர்பாக, எந்நேரமும் புகார் செய்யலாம்.திருப்பூர் கோட்ட மின் வாரியத்துக்கு உட்பட்ட 31 பிரிவு அலுவலகங்களில் 2.5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் ஏற்படும் மின் தடை தொடர்பாக எந்நேரமும் பொதுமக்கள் புகார் செய்யும் வகையிலும், உடனுக்குடன் சரி செய்யும் வகையிலும், "கம்ப்யூட்டரைஸ்டு' மின் தடை நீக்கும் மையம், குமார் நகர் அலுவலகத்தில் நேற்று துவக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல்., போன் மற்றும் மொபைல் போன் மூலம் 155 333 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், 0421 - 2259 100; 94458 58778 ; 94458 58779; 94458 58780 ஆகிய எண்களுக்கும் அழைத்து புகார் செய்யலாம். மின் தடையை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புகார் தெரிவிப்பவர்கள், மின் இணைப்பின் 10 இலக்க எண்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் கூறியதாவது:திருப்பூர் மாகராட்சிக்கு உட்பட்ட பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், பிரிட்ஜ்வே காலனி, வீரபாண்டி பிரிவு, ஆண்டிபாளையம், முதலிபாளையம், நல் லூர், சிட்கோ உள்ளிட்ட 31 பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர், 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம்.புகார் தெரிவிக்க, 10 இலக்க மின் இணைப்பு எண்ணை தெரிவிக்க வேண்டும். தனியார் மின் இணைப்புகளை பொருத்தவரை, பகல் நேரங்களில் புகார் பெறப்பட்டால், உடனுக்குடன் சரி செய்யப்படும். மாலை 6.00 மணிக்கு மேல் புகார் பதிவு செய்தால், மறுநாள் காலை 9.00 மணிக்குள் சரி செய்யப்படும்.
ஒரு பகுதி முழுவதும் மின் தடை, "டிரான்ஸ்பார்மர்' பழுது, மின் ஒயர் அறுந்து விழுதல் உள்ளிட்ட அனைத்து மின் தடை பிரச்னைகள் குறித்தும் புகார் வந்தால், இரவு, பகல் என எந்த நேரமாக இருந்தாலும், உடனுக்குடன் சரி செய்யப்படும், என்றார்.


Wednesday 2 January 2013

விரைவில் திருப்பூர் தாலுகாவை பிரிக்க அரசாணை


திருப்பூர் தாலுகாவை இரண்டாக பிரிப்பது தொடர்பாக, கலெக்டர்கள் மாநாட்டில் விவாதித்துள்ளதால், விரைவில் அரசாணை வெளியாக வாய்ப்புள்ளதாக, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.தொழில் நகரமான திருப்பூரில், வெளிமாவட்ட மக்கள் அதிகமாக குடியேறி வருவதால், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முன், பல்லடம் தாலுகாவில், திருப்பூர் நகரம் ஒரு பிர்காவாக இருந்தது. மக்கள் தொகை பெருக்கத்தாலும், பொருளாதார வளர்ச்சியாலும், தாலுகாவாக, மாநகராட்சியாக, மாவட்டமாகவும் உயர்ந்துள்ளது.அதேநேரத்தில், அரசு பணிகளையும், திட்டங்களையும் விரைந்து நிறைவேற்றுவது, திருப்பூரில் மந்தமாகிறது. எனவே, நிர்வாக வசதிக்காக, திருப்பூர் தாலுகாவை வடக்கு, தெற்கு என பிரிக்க உத்தேசிக்கப்பட்டது.