திருப்பூர் : சமீபத்தில் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம், நடைமுறைக்கு வந்துள்ளது. திருப்பூரில் இருந்து சென்னை செல்ல, படுக்கை வசதியுள்ள ஒரு டிக்கெட், 245 ரூபாய்; இது, பழைய கட்டணத்தில் இருந்து 28 ரூபாய் அதிகம். சாதாரண டிக்கெட், 130 ரூபாய்; இது, 22 ரூபாய் உயர்ந்துள்ளது.சமீபத்தில், ரயில் கட்டணத்தை உயர்த்தி, ரயில்வே துறை அறிவித்தது. புறநகர் சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணம் கி.மீ.,க்கு, 2 பைசா, புறநகர் இல்லாத பகுதிகளுக்கு, கி.மீ.,க்கு 3 பைசா உயர்த்தியது. இரண்டாம் வகுப்பு எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், கி.மீ.,க்கு, 4 பைசா, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில்களில் 6 பைசா உயர்த்தப்பட்டது. புதிய கட்டண விகிதங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்களில் பயணிக்க கட்டண விவரம்:
சென்னைக்கு பழைய சாதாரண கட்டணம் 108 ரூபாய்; ரூ.22 அதிகரித்து, 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. படுக்கை வசதி பழைய கட்டணம் 217 ரூபாய்; ரூ.28 அதிகரித்து, 245 ஆகியுள்ளது. மூன்றடுக்கு "ஏசி' பழைய கட்டணம் 572; புதிய கட்டணம் 620; இரண்டடுக்கு "ஏசி' பழையது 845; புதியது 870 என அதிகரித்துள்ளது.
பெங்களூரு செல்ல பழைய சாதாரண கட்டணம் 89; புதிய கட்டணம் 105. படுக்கை வசதி பழையது 178; புதியது 205. மூன்றடுக்கு "ஏசி' பழையது 430; புதியது 530. இரண்டடுக்கு "ஏசி' பழையது 730; புதியது 755 ரூபாய்.
மதுரைக்கு பழைய சாதாரண கட்டணம் 66 ரூபாய்; புதியது 80. படுக்கை வசதி பழையது 140; புதியது 160. மூன்றடுக்கு "ஏசி' பழையது 376; புதியது 445 ஆக உயர்ந்துள்ளது. திருப்பதிக்கு இரவில் செல்லும் அதிவிரைவு ரயிலில் பழைய சாதாரண கட்டணம் 85; புதியது 125. படுக்கை கட்டணம் பழையது 191; புதியது 220. மூன்றடுக்கு "ஏசி' கட்டணம் பழையது 524; புதியது 570. இரண்டடுக்கு "ஏசி' கட்டணம் பழையது 785; புதியது 815 ஆக உயர்ந்துள்ளது. பகலில் செல்லும் ரயிலில் உட்காரும் இருக்கை பழையது 120; புதியது 140. "ஏசி' சேர்கார் பழையது 441; புதியது 485 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூரில் இருந்து சேலத்துக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 55, எக்ஸ்பிரஸ் 45, பாசஞ்சர் 25, ஈரோடு, கோவைக்கு சூப்பர் பாஸ்ட் 40, எக்ஸ்பிரஸ் 30, பாசஞ்சர் 15, மதுரை எக்ஸ்பிரஸ் 80, பாசஞ்சர் 45, திருநெல்வேலிக்கு எக்ஸ்பிரஸ் 115, பாசஞ்சர் 65, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 130, பாசஞ்சர் 75, பாலக்காடு சூப்பர் பாஸ்ட் 55, எக்ஸ்பிரஸ் 45, பாசஞ்சர் 20, பெங்களூரு எக்ஸ்பிரஸ் 95, பாசஞ்சர் 55 என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களுக்கு செல்ல, ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கூடுதல் கட்டணம் செலுத்த, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், முன்பதிவு செய்யும் இடத்திலும், தகவல் மையத்திலும், சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், அவ்விரண்டு இடங்களில், கூடுதல் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம், என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.