போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 29 September 2012

கோவையில், கடந்த இரண்டு நாட்களாக, காட்மா சார்பில், நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.


கோவையில், கடந்த இரண்டு நாட்களாக, காட்மா சார்பில், நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
காட்மா தலைவர் ரவிக்குமார் கூறியதாவது: சென்னைக்கு மூன்று மணி நேரம் மின்வெட்டை அறிவித்து, அந்த மின்சாரத்தை, பிற மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும். வெளிச் சந்தையிலிருந்து மின்சாரம் பெற்று, தொழில் நகரங்களுக்கு, வழங்க வேண்டும் என்ற, இரண்டு கோரிக்கைகள், அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டன. இக்கோரிக்கைகளை, அதிகாரிகள், ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, தற்காலிகமாக, போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. அடுத்த, 15 நாட்களுக்குள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால், அனைவரும் குடும்பத்துடன் வந்து, உண்ணாவிரதம் இருப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.
மின்வாரியம் விளக்கம்: மின்வாரிய முதன்மை இன்ஜி., தங்கவேலு கூறியதாவது: காட்மா சங்கம் தெரிவித்த கோரிக்கைகளை, எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம். காற்றாலை மற்றும் பருவமழை இல்லாததால், தற்போது இந்நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில், வடசென்னை, மேட்டூர், வள்ளூர் பகுதிகளில் புதிய மின் திட்டங்களின் உற்பத்தி துவங்குவதால், மின்சாரம் சீராகும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, தங்கவேலு கூறினார்.

மின்வெட்டுக்கு கண்டனம் திருப்பூரில் 3-ந் தேதி முழு அடைப்பு: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் பனியன் தொழில்கள் அடியோடு முடங்கியுள்ளன. மின்வெட்டு பிரச்சினை குறித்த அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நடந்தது. சங்கத் தலைவர் முத்துரத்தினம் தலைமை தாங்கினார். கோவிந்தசாமி (டெக்மா சங்கம்) முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பேசும் போது மின்வெட்டு காரணமாக திருப்பூரில் பனியன் தொழில்கள், வர்த்தக, வியாபார நிறுவனங்கள் முடங்கி இருப்பதாக கூறியும், இதற்காக வலுவான போராட்டம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து டீமா சங்கத் தலைவர் முத்துரத்தினம் பேசியதாவது:-

மின்வெட்டு காரணமாக பின்னலாடை நகரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மின்வெட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து வருகிற 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 3-ந் தேதி திருப்பூரில் கடை அடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. வேலை நிறுத்தம் நடைபெறும் 3-ந் தேதி குமரன் சிலை அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும். இதில் அனைத்து தொழிலாளர்கள், தொழில் அமைப்பினர் பங்கேற்க வேண்டும்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

Thursday 27 September 2012

திருப்பூர் : பற்றாக்குறையை சமாளிக்க மீண்டும் வார மின் விடுமுறை:விரைவில் அமலுக்கு வருகிறது

திருப்பூர் :தொழிற்சாலைகளுக்கு வார மின் விடுமுறை; "பீக் ஹவர்ஸில்' மின்சாரம் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்த, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழகத்தின் தினசரி மின் தேவை 12 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உள்ளது; தற்போது 8,500 மெகாவாட் மட்டுமே கிடைத்து வருகிறது. உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளி பெருமளவு அதிகரித்துள்ளதால், தினமும் 18 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் மின்வாரியம் எடுத்து வருகிறது.

திருப்பூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலிஉடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

      திருப்பூரில் மின்வாரிய ஊழியருக்கு உதவியாளராக இருந்த ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி, உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் அருகே பெருமாநல்லூர், பொடாரம்பாளையத்தை சேர்ந்தவர் திருமால்; இவரது மக  ன் பெருமாள், 25. பெருமாநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் "லைன்மேன்'களுக்கு உதவியாளராக பணியாற்றி வந்தார்.

Wednesday 26 September 2012

திருப்பூர் : மின்வெட்டால் பாதிக்கப்படு வோருக்கு நிவாரணம் வழங்கக்கோரி, வரும் 1ல் வேலை நிறுத்த போராட் டம்


             திருப்பூர் : மின்வெட்டால் பாதிக்கப்படு வோருக்கு நிவாரணம் வழங்கக்கோரி, வரும் 1ல் வேலை நிறுத்த போராட் டம் நடத்தப் போவதாக, திருப்பூர் மாவட்ட கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இச்சங்க செயற்குழு கூட்டம், அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், "கிரில் ஒர்க்ஷாப்புகளுக்கு, பகலில் எட்டு மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும். மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைபோல், மின்வெட்டு பாதிப்புகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

மின்திருட்டை விட மோசமானது.


மின்திருட்டை விட மோசமான திருட்டு, புரட்டு - உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்தேறி வருகிறது. வாக்களித்த மக்களை முட்டாள்களாக கருதி கொண்டு - அரசியல்வாதிகள் செய்கிற ஒரு ஈனத்தனமான செயலாக உள்ளது - அதிகப்படியான மின்தடை நிலவும் இந்த காலத்தில், வி.ஐ.பி தொகுதிகளுக்கு மட்டும் அந்த மின் தடையில் இருந்து முழுவதுமாக விலக்களித்து - தடை இல்லா மின்சாரம் வழங்கும் அயோக்கியத்தனமான செயலையே - மின்திருட்டை விட மோசமான திருட்டு என்கிறோம்.

வாக்களித்த மற்ற தொகுதி மக்களை பார்த்து

Monday 24 September 2012

திருப்பூர் : ரயில்வே கேட் மூடி பத்து நாளாச்சு :பணிகள் துவங்காததால் அவதி


திருப்பூர் : சுரங்க பாலம் கட்டுமான பணிக்காக, ரயில்வே கேட் மூடப்பட்டு, பத்து நாட்களாகியும் பணிகள் துவங்காமல் உள்ளது.

             திருப்பூர் நகர் மத்தியில் ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. அடிக்கடி கேட் மூடப்படுவதால், சமயங்களில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் காத்திருந்து அவதிப்படுகின்றனர். அதனால், 20 கோடி ரூபாய் மதிப்பில் பிரிட்ஜ் வே காலனி பகுதியில், கனரக வாகனங்களுக்கான சுரங்க பாதையும், கார், இரு சக்கரம் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கான ஒரு சுரங்க பாதையும் அமையும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது.முதல் ரயில்வே கேட்டுக்கு மாற்றாக, கொங்கு மெயின் ரோடு மற்றும் யூனியன் மில் ரோட்டை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள இலகுரக வாகனங்களுக்கான சுரங்க பாதை அமைக்கும் பணியை ஒன்றரை ஆண்டு இழுபறிக்கு பின் தற்போது துவக்க திட்டமிடப்பட்டது. பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

திருப்பூர் மின்னல் வேகத்தில் பறக்கும் வாகனங்கள் ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து


திருப்பூர் : அதிக வேகத்தில், அஜாக்கிரதையாக செல்லும் வாகனங்களால், ரயில்வே மேம்பாலம், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக மாறி வருகிறது.
திருப்பூர் வடக்கு- தெற்கு பகுதிகளை இணைக்கும் மைய பகுதியாக ரயில்வே மேம்பாலம் உள்ளது. பி.என்., ரோடு, அவிநாசி ரோடு - குமரன் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்கு வாகனங்கள் சென்றுவர முக்கிய வழித்தடமாக ரயில்வே மேம்பாலம் உள்ளது. பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் மேம்பாலத்தை கடக்கின்றன. மேம்பாலம் ஏறி, இறங்கும் பகுதிகளில் அபாய
வளைவாக இருப்பதால், வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும்.
ஆனால், மேம்பாலத்தில் செல்லும் போது பெரும்பாலானோர், வாகனத்தின் வேகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில்லை. மின்னல் வேகத்தில்
மேம்பாலத்தில் வாகனங்கள்பறப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

Saturday 22 September 2012

அனல் மின் நிலைய எதிர்ப்பு உண்ணாவிரதம்: காங்கிரஸ் தலைவர் கோபி முடித்து வைத்தார்


அனல் மின் நிலைய எதிர்ப்பு உண்ணாவிரதம்: காங்கிரஸ் தலைவர் கோபி முடித்து வைத்தார்
திருப்பூர், 
ஊத்துக்குளி வட்டம், வடமுகம் காங்கேயம்பாளையத்தில் தனியார் நிறுவனத்திடன் இணைந்து அரசு அனல்மின் நிலையம் அமைக்க முயற்சி செய்து வருகிறது.
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அனல் மின் நிலைய எதிர்ப்பு குழு சார்பில் பொதுமக்கள், அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
 
உண்ணாவிரத போராட்டத்துக்கு அனல் மின் நிலைய எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். இந்த நிலையில் திருப்பூர் புறநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோபி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
 
மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் தெரிவித்து அவர்களிடம் பேச்சு நடத்த வைப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு ப.கோபி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Wednesday 19 September 2012

திருப்பூர் நாளை வேலை நிறுத்தம் அனைத்து தரப்பினரும் ஆதரவு


திருப்பூர்:டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் மானியம் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. திருப்பூரில் பனியன் தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் என்ற மத்திய அரசு அறிவிப்பால், தொழில் துறையினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மத்திய அரசின் போக்கை கண்டித்து, நாடு தழுவிய அளவில், நாளை (20ம் தேதி) வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்திலும், பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த ஓராண்டாக, ஓயாத மின்வெட்டு பிரச்னையால், சிக்கித்தவிக்கும் திருப்பூர் தொழில் துறையினரும், டீசல் விலை உயர்வால் அதிர்ச்சியில் உள்ளனர். அதனால், தொழில் துறையினர், தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங் கள், பனியன் வர்த்தகர்கள், ஆட்டோ-வேன் ஓட்டுனர்கள் என அனைத்து தரப்பினரும் ஓரணியில் திரண்டு, போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
பின்னலாடை ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் (டீமா) சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள், டீசலை பெரிதும் நம்பியுள்ளன. 

மின்வெட்டு அதிகமாக உள்ள நேரங்களில், டீசலை நம்பியே தொழில் நடக்கிறது. மத்திய அரசு,  பின்னலாடை தொழில் துறையினருக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலை மோசமாக உள்ளது.ஆனால், விலையை மீண்டும் உயர்த்தியிருப்பது, பொதுமக்களுக்கும், பனியன் தொழில் துறையினருக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தொழில் நிலவரத்தை மத்திய அரசுக்கு உணர்த்தி, டீசல் விலையை குறைக்கச் செய்ய வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து தொழில் துறையினரும் பங்கேற்க வேண்டும், என்றார்.சி.ஐ.டி.யு., பனியன் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி கூறுகையில், ""போராட்டத்துக்கு தேசிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள் ளன. திருப்பூரை பொறுத்தவரை, பனியன் தொழிலாளர் கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்பர்; தொழிற் சாலைகள் இயங்காது. ஆட்டோ, வேன் உரிமையாளர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காதர் பேட்டையில் உள்ள பனியன் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும்,'' என்றார்.

Monday 17 September 2012

ஊத்துக்குளி பகுதியில் நாளை செப் 18ல் மின் வினியோகம் தடைபடும்


ஊத்துக்குளி பகுதியில் நாளை செப் 18ல் மின் வினியோகம் தடைபடும்.ஊத்துக்குளி உதவி மின்வாரிய செயற்பொறியாளர் ( Kannan Ramasamy )வெளியிட்டுள்ள தகவல் : ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் வரும் 17.08.2012 ல் மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அன்று காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.


ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., ரெட்டிபாளையம், வி.ஜி.புதூர், தாலிக்கட்டி பாளையம், தள வாய்ப்பாளையம், பி.வி.ஆர்.,பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்களப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப் பாளையம், கவுண்டம்பாளையம்.கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்., பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கண்ணி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், விருமாண்டாம்பாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், நீலாக்கவுண்டம்பாளையம் மற்றும் செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது

Thursday 13 September 2012

ஆழம் -- 2வது படைப்பு -- டல்லடிக்கும் டாலர் நகரம்,


ஒவ்வொரு வாரத்தின் இறுதி மூன்று நாட்களும் திருப்பூர் நகர போக்குவரத்தில் நாம் நீந்தி தான் வரவேண்டியிருக்கும்.  மூச்சு திணறிவிடும்.  பிபி எகிறிவது போல படிப்படியாக வியாழன் தொடங்கும் சாலை போக்குவரத்து நெரிசல் சனிக்கிழமை அன்று உச்சமாய் இருக்கும்.  ஒவ்வொரு சனிக்கிழமையும் தொழிலாளர்களின் சம்பள தினம். தள்ளுவண்டி கடை முதல் டாஸ்மாக் கடை வரைக்கும் எங்கெங்கும் மனித தலைகளாகவே தெரியும்

Tuesday 11 September 2012

மின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HALPER பணிக...

TANGEDCO NEWS: மின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HALPER பணிக...: திருப்பூர் :"மின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HALPER பணிக்கு பரிந்துரைத்துள்ள பட்டியலை, பதிவுதாரர்கள் நேரில் வந்து உறுதி செய்து கொள்...


Friday 7 September 2012

ஒவ்வொருவரும் சமூக பாதுகாப்புசேவை திட்டத்தில் சேர அறிவுரை


திருப்பூர்: ""ஒவ்வொருவரும் சமூக பாதுகாப்பு சேவை திட்டத்தில் சேர வேண்டும். இதை உறுதிப்படுத்துவதே வைப்பு நிதி திட்டம்,'' என வருங்கால வைப்பு நிதி நிறுவன மாவட்ட செயல்பாட்டு அதிகாரி ஆல்பர்ட் தெரிவித்தார்."சேவ்' அமைப்பு சார்பில் "இளம்பெண் தொழிலாளர் வாழ்நிலை' கருத்தரங்கு, திருப்பூரில் நேற்று நடந்தது. இயக்குனர் அலோசியஸ் தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் வியாகுலமேரி வரவேற்றார்.
தொழிலாளர் காப்பீடு திட்டம் குறித்து, இ.எஸ்.ஐ., அலுவலக அதிகாரி விஜயகுமார் பேசுகையில், ""தொழிலாளர் அனைவரும் அவசியம் இ.எஸ்.ஐ., திட்டத்தில் சேர வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை பெற முடியும். சில தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அங்கும் சிகிச்சை பெறலாம். மாதச்சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் வரை பெறும் தொழிலாளர் மட்டுமே சேர முடியும். பணியில் இருக்கும்போது தொழிலாளர் இறந்தால், அவரது குடும்பத்துக்கு பென்ஷன் வழங்கப்படும்,'' என்றார்.வருங்கால வைப்பு நிதி திட்டம் பற்றி, மாவட்ட செயல்பாட்டு அலுவலர் ஆல்பர்ட் பேசுகையில், ""தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் வைப்பு நிதி (பி.எப்.,) அடிப்படை சட்டம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். கூட்டுக்குடும்பமாக இருந்தபோது, முதியோரை குடும்பத்தில் உள்ளவர்கள் கவனித்து வந்தனர். தனி குடும்பமாக வந்தபின், முதியோரை யார் காப்பது என்ற நிலை உருவாகும். அதனால், சமூக பாதுகாப்பு சேவை திட்டத்தில் நாம் சேர வேண்டும். 
இதை உறுதிப்படுத்துவதே வைப்பு நிதி திட்டம். தொழிலாளியிடம் எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப் படுகிறதோ, அதே அளவு தொகையை கம்பெனியும் செலுத்தும். தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பணம் செலுத்திய பிறகு, உங்கள் கணக்கில் உள்ள தொகையை கடனாகவும், படிப்பு செலவுக்கும், மருத்துவ செலவுக்கும் எடுக்கலாம். இதில் சேர்ந்த ஒருவர், பணி காலத்தில் இறந்தால், அவரது குடும்பத்துக்கு பென்ஷன் 
வழங்கப்படும். மருத்துவ சிகிச்சை பெற இன்சூரன்ஸ் திட்டமும் உள்ளது. ஒவ்வொரு தொழிலாளியும் பி.எப்., திட்டத்தில் சேர வேண்டும்,'' என்றார்.தொழிலாளர் நலச்சட்டம் பற்றி தொழிலாளர் அலுவலர் பழனிச்சாமி பேசினார். குறும்பட இயக்குனர் ஜோபிரகாஷ் எடுத்த "நல்லதோர் வீணை செய்தே' என்ற குறும்பட தகடு வெளியிடப்பட்டது. "சேவ்' கள ஒருங்கிணைப்பாளர் பரிமளச்செல்வி நன்றி கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் விளைநிலங்கள் வழியாக, காஸ் குழாய் பதிக்கும் பணிக்கு அனுமதி வழங்க முடியாது,


திருப்பூர் மாவட்டத்தில் விளைநிலங்கள் வழியாக, காஸ் குழாய் பதிக்கும் பணிக்கு அனுமதி வழங்க முடியாது,' என, திருப்பூரில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.கொச்சின் - பெங்களூரு இடையே காஸ் குழாய் பதிக்கும் திட்டத்தில், விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருப்பூர் மாவட்ட விவசாயிகளுடன் கலெக்டர் மற்றும் உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளன. இதுவரை தீர்வு ஏற்படவில்லை.கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கஜலட்சுமி முன்னிலை வகித்தார். "கெய்ல்' நிறுவனம் சார்பில் மூத்த திட்ட மேலாளர் அங்கமுத்து, திட்டம் குறித்து விளக்கினார். விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு அளித்த மனுவுக்கு, மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எழுதிய பதில் வாசிக்கப்பட்டு, அதன் நகல் வினியோகிக்கப்பட்டது.அதில், "குழாய் பதிப்பால் விவசாயம் பாதிக்கப்படாது;

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?: பஸ் டிக்கெட்டுக்கு முன்பதிவு துவக்கம்

திருப்பூர்: "தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர், விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிக்க, இன்று முதல் டிக்கெட் "ரிசர்வேஷன்' செய்து கொள்ளலாம்,' என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.நடப்பாண்டு நவ., 13ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கியுள்ள பலர், குடும்பத்துடன் சொந்த ஊர் செல்வர். கூட்ட நெரிசலை தவிர்க்க, பண்டிகையை ஒட்டி, சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்குவது வழக்கம். இதற்கான அறிவிப்பு, அக்., இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும்.அதற்கு முன், விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கான டிக்கெட் "புக்கிங்' இன்று துவங்குகிறது. திருப்பூரில் இருந்து சென்னை, திருச்செந்தூர், வேளாங்கன்னி, நாகர்கோவில், ராமேஸ்வரம், ராஜபாளையம், கும்பகோணம், அறந்தாங்கி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விரைவு பஸ்களில் பயணிப்பதற்கான "ரிசர்வேஷன்' டிக்கெட்டுகளை, http://www.tnstc.in/TNSTCOnline/  என்ற இணைய தளத்தில் "புக்' செய்யலாம்.போக்குவரத்து துறையினர் கூறியதாவது:இணைய தளத்தில் பயணியின் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்ய வேண்டும். டிக்கெட் இருக்கை நிலை உடனடியாக தெரியும். பஸ் புறப்படும் நேரம், சேரும் நேரம், பஸ் எண், குளிர்சாதன வசதியுள்ளதா; சாதாரண பஸ்சா என்பது குறித்த விவரங்களும் இணைய தளத்தில் இடம் பெற்றிருக்கும், என்றனர். 

Thursday 6 September 2012

பல்லடம் அருகே மின் கம்பியில் உரசி தீ விபத்து: ரூ.4 லட்சம் பஞ்சு-வேன் எரிந்து நாசம்


பல்லடம் அருகே மின் கம்பியில் உரசி தீ விபத்து: ரூ.4 லட்சம் பஞ்சு-வேன் எரிந்து நாசம்
பல்லடம், செப். 6-

திருப்பூர் மங்கலத்தில் இருந்து ஒரு வேன் பஞ்சு  லோடு ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. வேனை டிரைவர் ரமேஷ் (வயது 29)  ஓட்டி வந்தார். மாணிக்காபுரத்தில் வேன் வந்த போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் உரசியது. இதில் வேனில் ஏற்றப்பட்டிருந்த பஞ்சு லோடில் தீப்பிடித்தது. தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

பல்லடம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.  தீயில் வேனும், அதில் ஏற்றி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பஞ்சு லோடும் எரிந்து நாசமானது.

இது குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Sunday 2 September 2012

10 ஆயிரம் லஞ்சம் : திருப்பூர் மாநகராட்சி அதிகாரி கைது


திருப்பூர் மாநகராட்சியில், கட்டட பிரிவு உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் ராமலிங்கம் 43; மூன்றாவது மண்டலத்தில் பணியாற்றி வந்தார். நல்லூர் ஜெய் நகரை சேர்ந்த லோகநதான் என்பவர், தனது கட்டடத்துக்கு அனுமதி கோரி, கடந்த 13ம் தேதி விண்ணப்பித்திருந்தார்.

இருப்பினும், கட்டட அனுமதி வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டுமென, உதவி பொறியாளர் ராமலிங்கம் வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து, லோகநாதன் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதல்படி, தாராபுரம் ரோட்டில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகத்துக்கு லோகநாதன் பணத்துடன் சென்றுள்ளார்.

 உதவி பொறியாளர் ராமலிங்கம் இல்லாததால், மொபைல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மண்ணரையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை கொடுக்குமாறும் அழைத்துள்ளார்.

அதன்பின், லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் மண்ணரை சென்ற லோகநாதன், அங்குள்ள சிறிய சந்தில் வைத்து பணம் 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். உதவி பொறியாளர், அப்பணத்தை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பணத்தை கொடுத்துவிட்டதாக "சைகை' செய்ததும், லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி பொறியாளரை கையும், களவுமாக பிடித்தனர்.

தாராபுரம் ரோட்டில் உள்ள பொறியாளர் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில், ராமலிங்கம் தவறை ஒப்புக்கொண்டார்.

நேர்மைக்கு கிடைத்த பரிசு? திருப்பூர் எஸ்.பி., திடீர் மாற்றம்


திருப்பூர் மாவட்டத்தில் அதிரடியாக செயல்பட்ட எஸ்.பி., ஆஸ்ரா கர்க், தர்மபுரிக்கு மாற்றப்பட்டார்.திருப்பூர் எஸ்.பி.,யாக ஆஸ்ரா கர்க், கடந்த ஜூன்.,4 ல் பொறுப்பேற்றார். அன்று முதல், தனது அதிரடி நடவடிக்கைகளால் மக்களிடம் நற்பெயர் பெற்றார். மக்களிடம் நேரடியாக குறை கேட்ட ஆஸ்ரா கர்க், உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், மூன்றே மாதத்தில் திடீரென தர்மபுரிக்கு நேற்று மாற்றப்பட்டார். தர்மபுரியில் பணியாற்றிய அமித்குமாரசிங் திருப்பூர் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குவாரி, செங்கல் சூளைகளில் திருப்பூர் எஸ்.பி., திடீர் சோதனை


உடுமலை வருவாய் கோட்டத்தில் இயங்கி வரும் குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகளில், திருப்பூர் எஸ்.பி., தலைமையிலான போலீசார், நேற்று திடீர் சோதனை நடத்தினர்.உடுமலை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள்; 10க்கும் அதிகமான குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கனிம வள விதிகளை மீறி மண் எடுப்பதாகவும், பாறைகள் தகர்க்கப்படுவதாகவும், புகார் உள்ளது.

இந்நிலையில், குவாரி மற்றும் செங்கல் சூளைகளில், திருப்பூர் எஸ்.பி., ஆஸ்ரா கர்க் தலைமையிலான போலீசார், நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர். விதிகளுக்கு உட்பட்டு பணிகள் நடைபெறுகிறதா, என ஆய்வு நடத்தப்பட்டதாக, கூறப்படுகிறது. பின்னர், உடுமலை தாலுகா அலுவலகத்தில், எஸ்.பி., மற்றும் வருவாய் கோட்டாட்சியர் லதா பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி போலீஸ் மற்றும் வருவாய்துறை தரப்பில், எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை.

திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்: புதிய போலீஸ் சூப்பிரண்டாக அமித் குமாரசிங்


திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்: புதிய போலீஸ் சூப்பிரண்டாக அமித் குமாரசிங்
திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ரா கர்க், தர்மபுரிக்கு மாற்றப்பட்டார். திருப்பூருக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டாக அமித் குமாரசிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் 2003ம் ஆண்டில் ஐ.பி.எஸ்., முடித்தவர். தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றியபின் தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார். 

அமித் குமார சிங் கூறுகையில், சட்டம் மற்றும் ஓழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு என அனைத்து கோணத்திலும் தனிக்கவனம் செலுத்தப்படும் என்றார்.