போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 26 May 2013

பெற்றோர் திட்டியதால் வீட்டு விட்டு வெளியேறி பஸ்சில் பரிதவித்த சிறுமி: போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

திருப்பூர், மே. 25-

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகேயுள்ள வெள்ளைய கவுண்டன்புதூர் குட்டைகாடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். கோவில் அர்ச்சகராக உள்ளார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் கோவையில் உள்ள மருதமலையில் பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறாள். 2-ம் பெண் குழந்தைகள் என்பதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

மின்வெட்டு நேரம் குறைந்தும் பயனில்லை : தாழ்வழுத்த மின் சப்ளையால் அவதி


திருப்பூர்:காற்றாலை மின்சாரம் கை கொடுப்பதால், மின்வெட்டு நேரம் வெகுவாக குறைந்துள்ளது. அதேநேரத்தில், மின்னழுத்தம் குறைவு காரணமாக, கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, மின் உபகரணங்கள் பழுதாவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், பனியன் நிறுவனங்கள், ஆயில், அரிசி, இயந்திர உற்பத்தி தொழிற்சாலைகள், வணிகம் மற்றும் வீட்டு மின் இணைப்புகள் என ஐந்து லட்சம் இணைப்புகள் வரை உள்ளன. தினமும் சராசரியாக 500 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மின் பற்றாக்குறை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக, தொழில் துறையினர் மட்டுமின்றி, பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.கடந்த இரு வாரங்களாக, காற்றாலை மின்னுற்பத்தி கிடைப்பதால், மின்வெட்டு நேரம் வெகுவாக குறைந்துள்ளது. சில நாட்கள் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்தது. தொழில் துறையினரும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்திருந்த நேரத்தில், கடந்த சில நாட்களாக தாழ்வழுத்த மின் வினியோகம் காரணமாக, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இயந்திரங்களை இயக்கமுடியாமல், ஜெனரேட்டர்களையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் துறையினரும், வீடுகளில், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு போதிய மின்சாரம் கிடைக்காமல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெண்களும் தெரிவித்தனர். "பீக் அவர்ஸ்' எனப்படும், மாலை 6.00 முதல் 9.00 மணி வரை, மிகவும் குறைந்தழுத்த மின்சாரம் மட்டுமே சப்ளையாகிறது; அதனால், மின் உபகரணங்கள் பழுதாகி வருகின்றன.

Sunday 19 May 2013

மின்சார கட்டுப்பாடுகளை தளர்த்த சாய ஆலை சங்கத்தினர் கோரிக்கை


திருப்பூர்:"காற்றாலை மின்னுற்பத்தி அதிகரித்துள்ளதால், உயரழுத்த மின்சார பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்,' என, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இச்சங்க தலைவர் நாகராஜன், தமிழக மின்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம்:சில நாட்களாக, காற்றாலை மின்னுற்பத்தி கணிசமான அளவு உயர்ந்து, தொழில் துறையினருக்கு உதவி வருகிறது. வரும் ஆறு மாதங்களுக்கு மின்னுற்பத்தி அதிகரித்து, உயரழுத்த மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு சீரான மின் வினியோகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 3,000 முதல் 3,500 மெகாவாட் வரை மின்னுற்பத்தி நடக்கிறது. எனினும், உயர் மின்னழுத்த இணைப்பில் தேவையான அளவுக்கு மின்சாரம் பயன்படுத்த முடிவதில்லை.மொத்த தேவையில், 60 சதவீதத்தை மட்டுமே பெற வேண்டும்; மொத்த மின்திறனில் 60 சதவீதத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்; மாலை 6.00 முதல் இரவு 10.00 மணி வரை, உயரழுத்த மின்பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இக்கட்டுப்பாடுகளால், உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக பெற முடியவில்லை. காற்றாலை மின்னுற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என மின்வாரியம் நெருக்கடி தருகிறது. இதனால், முழு நேர மின்வினியோகம் இருந்தாலும், தடை செய்யப்பட்ட நேரத்தில், ஜெனரேட்டர் மூலம் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.மின்சாரம் இருக்கும் நேரங்களில், உயரழுத்த மின்சாரத்தை தேவையான அளவுக்கு பயன்படுத்தவும், உற்பத்தி குறையும்போது, 20 சதவீதம் பயன்பாட்டை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்தி சீரான தருணங்களில், மாலை நேர மின்கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும், என, அக்கடிதத்தில் கூறியுள்ளார்.


Sunday 12 May 2013

ஈரோடு - பாலக்காடு இடையே நீட்டிப்பு செய்யப்பட்ட பயணிகள் ரயில் சேவை துவங்கியது.


ஈரோடு - பாலக்காடு இடையே நீட்டிப்பு செய்யப்பட்ட பயணிகள் ரயில் சேவை துவங்கியது.

கேரள மாநிலம், பாலக்காடு - கோவை இடையே பயணிகள் மின்தொடர் ரயில் (இன்ஜின் மட்டும்) சேவை இருந்தது. அந்த ரயிலை, ஈரோடு வரை நீட்டிக்க வேண்டும், என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, இன்று முதல் (12ம் தேதி), ஈரோடு - பாலக்காடு இடையே, எட்டு பெட்டிகளுடன், பயணிகள் ரயில் சேவை காலை, 11.20 மணிக்கு துவங்கியது.சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுஜாதா ஜெயராஜ், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி ஆகியோர் நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில் சேவையை துவக்கி வைத்தனர்.பின், கோட்ட மேலாளர், சுஜாதா ஜெயராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும். வாகனங்கள் நிறுத்தும் இடம், பூங்கா, பஸ் நிறுத்தம், முகப்பு விளக்குகள், பழுதான கட்டிடங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் செய்யப்படும். இரண்டு லிஃப்ட் அமைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது.தானியங்கி நடைபாதை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. ஈரோடு - பழனி இடையே ரயில் சேவை குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது. காட்பாடி - சேலம் இடையிலான ரயில் சேவையை, ஈரோடு வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும், என்றார்.ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில்வே அட்டவனைப்படி, நாளை (12ம் தேதி) முதல், பாலக்காட்டில் இருந்து மதியம், 2.30 மணிக்கு புறப்பட்டு, இரவு, 7 மணிக்கு ஈரோடு வந்தடைகிறது.பின், ஈரோட்டில் இருந்து காலை, 7.45 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு பாலக்காட்டுக்கு சென்றடைகிறது. வாரத்தில், வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களுக்கு, தினமும் பயணிகள் ரயிலாக இயக்கப்படும், என்றனர்.சேலம் கோட்ட ஏ.எஸ்.சி., ஆனந்தராஜ், ரயில்வே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவநேசன் உட்பட பலர் பங்கேற்றனர்