போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Monday 3 February 2014

ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு: திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் தகவல்

"ஆதார் அடையாள அட்டை, தபால் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், இணைய தளம் வாயிலாக, ஆதார் அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,' என, திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு, ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு முகாம் நடந்தது. கடந்த டிச., மாதம், முதல்கட்ட முகாம் நிறைவடைந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பதிவு முகாம் நடந்ததால், கணக்கெடுப்பில் விடுபட்டவர்களும், இடைப்பட்ட காலத்தில் குடிபெயர்ந்தவர்களாலும் பதிவு செய்ய முடியவில்லை.

Monday 20 January 2014

அரசு வங்கிகளைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் !

மொத்தக் கடன் தொகையில் 50% இந்த தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் சூறையாடி தீர்க்கப்பட்டிருக்கின்றன.


ந்தியாவின் 100 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்த 15 மாதங்களில் ரூ 2.1 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களை புதுப்பிக்க உள்ளன. அதாவது, அடுத்த 15 மாதங்களில் இந்நிறுவனங்கள் கட்ட வேண்டிய கடன்களின் காலக் கெடு முடிவுக்கு வருகின்றது, அந்தக் கடன்களுக்கு மாற்றாக புதிய கடன்களை வங்கிகள் கொடுக்கப் போகின்றன. காலாவதியாகப் போகின்ற இந்த கடன்களின் மதிப்பு 2013-ம் ஆண்டின் இறுதியில் இந்திய வங்கிகளின் நிகர மதிப்பில் 29 சதவீதம் ஆகும். இந்தத் தகவல்கள் ஃபிட்ச் குழுமத்தைச் சேர்ந்த இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

Tuesday 3 December 2013

திருப்பூர்:உங்கள் பகுதியில் மின் வெட்டு எப்போது?

திருப்பூர்:மின் பற்றாக்குறையை சமாளிக்க, திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தினமும் நான்கு மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. அதற்கான நேரங்களை, மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.

மின் பற்றாக்குறை காரணமாக மீண்டும் மின் வெட்டு படிப்படியாக அதிகரித்து வருகிறது. தினமும், எட்டு மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வந்ததோடு, அடிக்கடி ஏற்பட்டு வருவதால் தொழில் துறையினரும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வந்தனர். தொழில் துறையினரும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதால், மின் வெட்டு நேரத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தினர்.

Monday 15 July 2013

ஏழு ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம்; தமிழகத்தில் முதல் முறையாக சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் துவக்கம்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, ஒலப்பாளையத்தில் சென்னை சில்க்ஸ் மற்றும் “டாடா பவர்” நிறுவனங்களின் சார்பில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் தனது செயல்பாட்டை ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

 இதன் துவக்க விழாவில் பங்கேற்று, டாடா சோலார் பவர் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் பி.அருள்குமார் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பேசும்போது, தமிழகத்தின் மின் தேவை மிக அதிகமாக உள்ளது. தற்போது நிலக்கரியின் மூலமே 80 சதவீத அளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த 50 ஆண்டுகளில் நிலக்கரி போன்ற கனிம வளங்கள் பூமியில் குறைந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாற்று வழியில் மின் சக்தியை உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

Wednesday 26 June 2013

முறைகேடாக மின்சாரம் பயன்பாடு: பறக்கும் படையினர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூரில், மின்வாரிய பறக்கும் படையினர் நடத்திய ஆய்வில், புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்துக்கு 3.58 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்துவதை கண்டறிந்து, அபராதம் விதிக்கும் வகையில், மின் வாரிய பறக்கும் படை மற்றும் முன்னாள் ராணுவத்தினரை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு, திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மின்வாரிய ஊழியர்களுக்கே தெரியாமல், திருப்பூரில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய ஆய்வில், மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிரே, புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்துக்கு தற்காலிக இணைப்பு பெறாமல், அருகில் உள்ள கட்டடத்தில் இருந்து 10 கிலோ வோல்ட் வரை முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை கண்டறிந்து, மூன்று லட்சத்து 58 ஆயிரத்து 934 ரூபாய் அபராதம் மற்றும் 40 ஆயிரம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் வணிக மின் இணைப்பு பெற்று, வீடுகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளதும் தெரியவந்தது.

Monday 10 June 2013

திருப்பூரில் தரைமட்ட பாலம் அமைப்பதை எதிர்த்து வழக்கு

திருப்பூரில் தரைமட்ட மேம்பாலம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக லோக் சத்தா கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் செ. ஈஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: