போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Thursday 11 April 2013

திருப்பூர் : துணை மின் நிலையத்தில் "ஸ்கேடா ' மைய பணிகள் தீவிரம்


           திருப்பூர், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில் அமைக்கப்படும், நவீன "ஸ்கேடா' தொழில் நுட்ப மையத்திற்கான, இயந்திரங்கள் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டு, அவற்றை  பொருத்தும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில், 30 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு மேல் உள்ள நகரங் களில், மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டத்தின் கீழ், செயற்கைக்கோள்  உதவியுடன், முழுவதும் கம்ப்யூட்டர்  மயமாக்கப்பட்ட, அதிநவீன தொழில் நுட்பத்தில் "ஸ்கேடா'  (மேல்  கட்டுப்பாடு மற்றும் விவரங்கள் சேகரித்தல் மற்றும் பகிர்மான மேலாண்மை  திட்டம்) மையம் அமைக்கப்படுகிறது. "ஸ்கேடா' மையத்தின் மூலம் மின் பகிர்மானம், மின்கசிவு, மின் துண்டிப்பு, மின் இழப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் கண்காணிக்க முடியும்; ஒவ்வொரு மின் பாதையிலும் பயன் படும் மின் அளவும், ஒவ்வொரு மின் நுகர்வோர் பயன்படுத்தும் மின்  அளவீடும் தெரிந்துகொள்ள முடியும். "ஸ்கேடா' மையத்திலிருந்து, நவீன தொழில் நுட்பத்தின் மூலம், மின் "ரீடிங்' எடுத்து, பில் அனுப்பவும் முடியும். மின் பாதைகளில் ஏதாவது தடங்கல், துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக  "அலர்ட்' தகவல் கிடைப்பதோடு,  சரியான இடத்திற்கு உடனே சென்று, அதனை சீராக்கவும் இந்த தொழில்  நுட்பம் உதவுகிறது. திருப்பூர், மின் பகிர்மான வட்டத்துக்கு, சீனாவை சேர்ந்த நிறுவனத்தின் மூலம், நவீன தொழில் நுட்ப மையம், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில் அமைக்கப்படுகிறது. அதிகாரிகள் கூறியதாவது: கட்டுமான பணி முடிந்து, தளவாடங்கள் பொருத்தும் பணி நடந்து வருகின்றன.  பெல்ஜியத்திலிருந்து, மையத்துக்கான இயந்திரங்கள் வந்துள்ளன. அந்நாட்டின் பொறியாளர்கள், இயந்திரத்தை பொருத்தி வருகின்றனர்; இம்மாத இறுதிக்குள் பணி நிறைவடையும், என்றனர்.

Wednesday 10 April 2013

திருப்பூர் ஆர்வம் காட்டாத மின் நுகர்வோர் வீணாக இருக்கும் தகவல் மையம்


திருப்பூர், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள, தகவல் மற்றும் புகார் மையத்தை அணுக மக்கள் ஆர்வம் காட்டாததால், அத்திட்டம் வீணாகி வருகிறது.

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோருக்கு ஏற்படும் மின் சேவை குறைபாடுகளை தெரிவிக்கவும், புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட தகவல்களை பெறவும், மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில், தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இம்மையத்தில், சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்; காலை 10.00 முதல் 1.00 மணி வரை, இம்மையம் செயல்படுகிறது. மையம் அமைத்து நான்கு மாதங்களாகியும் சொற்ப அளவிலான மக்களே, இதன் மூலம் பயனடைந்துள்ளனர். மின்நுகர்வோர் ஆர்வம் காட்டாததால், இம்மையம் வீணாகி வருகிறது.

அதிகாரிகளிடம் கேட்ட போது, "தகவல் மையம் அமைத்தும், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இம்மையத்தில் புகார் தெரிவித்தால், உடனடியாக தீர்வு கிடைக்கும். தேவையான தகவல்களும், வழிகாட்டுதல்களும் கிடைக்கும். ஆனால், நுகர்வோர், புரோக்கர்களையும், அருகிலுள்ள மின் பணியாளர்களிடமும் கேட்டு வருகின்றனர். இதனால், நுகர்வோருக்கு செலவுதான் அதிகரிக்கும். தகவல் மையத்தை பயன்படுத்த, மின் நுகர்வோர் முன்வர வேண்டும்,' என்றனர்.

Saturday 6 April 2013

ரயில் கட்டணம் உயர்வு திருப்பூரில் அமலுக்கு வந்தது

திருப்பூர்: ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு, திருப்பூரில் அமலுக்கு வந்தது. கடந்த 1ம் தேதி முதல் உயர் வகுப்பு ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு கட்டணம், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கூடுதல் கட்டணம், தட்கல் கட்டணம், இரண்டாவது வகுப்பு ஏ.சி., மற்றும் மூன்றாம் வகுப்பு ஏ.சி., கட்டணம் உயர்த்தப்பட்டது. திருப்பூரில் இருந்து சென்னை செல்ல, இதுவரை படுக்கை வசதிக்கு 245 ரூபாய்; மூன்றடுக்கு ஏ.சி., 620; இரண்டடுக்கு ஏ.சி., 870; கட்டண உயர்வுக்குபின், படுக்கை வசதிக்கு 255; மூன்றடுக்கு ஏ.சி., 650; இரண்டடுக்கு ஏ.சி., 915. தட்கலில் பதிவு செய்ய, படுக்கை வசதி 345; மூன்றடுக்கு ஏ.சி., 910 மற்றும் இரண்டடுக்கு ஏ.சி., 1,225 ரூபாய். திருப்பதி செல்ல, இதுவரை படுக்கை வசதிக்கு 240; மூன்றடுக்கு ஏ.சி., 600; இரண்டடுக்கு ஏ.சி., 845; கட்டண உயர்வுக்குபின், படுக்கை வசதிக்கு 250; மூன்றடுக்கு ஏ.சி., 635; இரண்டடுக்கு ஏ.சி., 885. இதுவே, தட்கலில் 340, 890 மற்றும் 1,195 ரூபாய். பாட்னா செல்ல, படுக்கை வசதிக்கு 720; மூன்றடுக்கு ஏ.சி., 1,865; இரண்டடுக்கு ஏ.சி., 2,775; கட்டண உயர்வுக்குபின், படுக்கை வசதிக்கு 720; மூன்றடுக்கு ஏ.சி., 1,880; இரண்டடுக்கு ஏ.சி., 2,805; தட்கலில் பதிவு செய்ய 895, 2,240 மற்றும் 3,220 ரூபாய். பெங்களூரு செல்ல, படுக்கை வசதிக்கு 205; மூன்றடுக்கு ஏ.சி., 530; இரண்டடுக்கு ஏ.சி., 755; கட்டண உயர்வுக்குபின், படுக்கை வசதிக்கு 215; மூன்றடுக்கு ஏ.சி., 550; இரண்டடுக்கு ஏ.சி., 780. தட்கலில் பதிவு செய்ய 295, 805 மற்றும் 1,095 ரூபாய்.

Wednesday 3 April 2013

திருப்பூர் மக்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க...பரிசீலனை!"பயோ மெத்தனேசன் பிளான்ட்' அமைக்க திட்டம்


திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் எளிதில் மக்கும் தன்மை கொண்ட குப்பையில் இருந்து எரிவாயு தயாரித்து, அதன் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.திருப்பூர் மாநகராட்சியில் தினமும் 550 மெட்ரிக் டன் அளவுக்கு திடக்கழிவுகள் உருவாகின்றன. அவற்றில், 450 முதல் 500 டன் வரையிலான கழிவுகள் தினமும் சேகரிக்கப்படுகின்றன.