போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 6 April 2013

ரயில் கட்டணம் உயர்வு திருப்பூரில் அமலுக்கு வந்தது

திருப்பூர்: ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு, திருப்பூரில் அமலுக்கு வந்தது. கடந்த 1ம் தேதி முதல் உயர் வகுப்பு ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு கட்டணம், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கூடுதல் கட்டணம், தட்கல் கட்டணம், இரண்டாவது வகுப்பு ஏ.சி., மற்றும் மூன்றாம் வகுப்பு ஏ.சி., கட்டணம் உயர்த்தப்பட்டது. திருப்பூரில் இருந்து சென்னை செல்ல, இதுவரை படுக்கை வசதிக்கு 245 ரூபாய்; மூன்றடுக்கு ஏ.சி., 620; இரண்டடுக்கு ஏ.சி., 870; கட்டண உயர்வுக்குபின், படுக்கை வசதிக்கு 255; மூன்றடுக்கு ஏ.சி., 650; இரண்டடுக்கு ஏ.சி., 915. தட்கலில் பதிவு செய்ய, படுக்கை வசதி 345; மூன்றடுக்கு ஏ.சி., 910 மற்றும் இரண்டடுக்கு ஏ.சி., 1,225 ரூபாய். திருப்பதி செல்ல, இதுவரை படுக்கை வசதிக்கு 240; மூன்றடுக்கு ஏ.சி., 600; இரண்டடுக்கு ஏ.சி., 845; கட்டண உயர்வுக்குபின், படுக்கை வசதிக்கு 250; மூன்றடுக்கு ஏ.சி., 635; இரண்டடுக்கு ஏ.சி., 885. இதுவே, தட்கலில் 340, 890 மற்றும் 1,195 ரூபாய். பாட்னா செல்ல, படுக்கை வசதிக்கு 720; மூன்றடுக்கு ஏ.சி., 1,865; இரண்டடுக்கு ஏ.சி., 2,775; கட்டண உயர்வுக்குபின், படுக்கை வசதிக்கு 720; மூன்றடுக்கு ஏ.சி., 1,880; இரண்டடுக்கு ஏ.சி., 2,805; தட்கலில் பதிவு செய்ய 895, 2,240 மற்றும் 3,220 ரூபாய். பெங்களூரு செல்ல, படுக்கை வசதிக்கு 205; மூன்றடுக்கு ஏ.சி., 530; இரண்டடுக்கு ஏ.சி., 755; கட்டண உயர்வுக்குபின், படுக்கை வசதிக்கு 215; மூன்றடுக்கு ஏ.சி., 550; இரண்டடுக்கு ஏ.சி., 780. தட்கலில் பதிவு செய்ய 295, 805 மற்றும் 1,095 ரூபாய்.

No comments:

Post a Comment