பல்லடம், செப். 6-
திருப்பூர் மங்கலத்தில் இருந்து ஒரு வேன் பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. வேனை டிரைவர் ரமேஷ் (வயது 29) ஓட்டி வந்தார். மாணிக்காபுரத்தில் வேன் வந்த போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் உரசியது. இதில் வேனில் ஏற்றப்பட்டிருந்த பஞ்சு லோடில் தீப்பிடித்தது. தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
பல்லடம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீயில் வேனும், அதில் ஏற்றி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பஞ்சு லோடும் எரிந்து நாசமானது.
இது குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருப்பூர் மங்கலத்தில் இருந்து ஒரு வேன் பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. வேனை டிரைவர் ரமேஷ் (வயது 29) ஓட்டி வந்தார். மாணிக்காபுரத்தில் வேன் வந்த போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் உரசியது. இதில் வேனில் ஏற்றப்பட்டிருந்த பஞ்சு லோடில் தீப்பிடித்தது. தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
பல்லடம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீயில் வேனும், அதில் ஏற்றி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பஞ்சு லோடும் எரிந்து நாசமானது.
இது குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment