திருப்பூர்,
ஊத்துக்குளி வட்டம், வடமுகம் காங்கேயம்பாளையத்தில் தனியார் நிறுவனத்திடன் இணைந்து அரசு அனல்மின் நிலையம் அமைக்க முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அனல் மின் நிலைய எதிர்ப்பு குழு சார்பில் பொதுமக்கள், அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
உண்ணாவிரத போராட்டத்துக்கு அனல் மின் நிலைய எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். இந்த நிலையில் திருப்பூர் புறநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோபி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் தெரிவித்து அவர்களிடம் பேச்சு நடத்த வைப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு ப.கோபி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment