போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 29 September 2012

மின்வெட்டுக்கு கண்டனம் திருப்பூரில் 3-ந் தேதி முழு அடைப்பு: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் பனியன் தொழில்கள் அடியோடு முடங்கியுள்ளன. மின்வெட்டு பிரச்சினை குறித்த அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நடந்தது. சங்கத் தலைவர் முத்துரத்தினம் தலைமை தாங்கினார். கோவிந்தசாமி (டெக்மா சங்கம்) முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பேசும் போது மின்வெட்டு காரணமாக திருப்பூரில் பனியன் தொழில்கள், வர்த்தக, வியாபார நிறுவனங்கள் முடங்கி இருப்பதாக கூறியும், இதற்காக வலுவான போராட்டம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து டீமா சங்கத் தலைவர் முத்துரத்தினம் பேசியதாவது:-

மின்வெட்டு காரணமாக பின்னலாடை நகரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மின்வெட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து வருகிற 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 3-ந் தேதி திருப்பூரில் கடை அடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. வேலை நிறுத்தம் நடைபெறும் 3-ந் தேதி குமரன் சிலை அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும். இதில் அனைத்து தொழிலாளர்கள், தொழில் அமைப்பினர் பங்கேற்க வேண்டும்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment