போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 2 September 2012

குவாரி, செங்கல் சூளைகளில் திருப்பூர் எஸ்.பி., திடீர் சோதனை


உடுமலை வருவாய் கோட்டத்தில் இயங்கி வரும் குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகளில், திருப்பூர் எஸ்.பி., தலைமையிலான போலீசார், நேற்று திடீர் சோதனை நடத்தினர்.உடுமலை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள்; 10க்கும் அதிகமான குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கனிம வள விதிகளை மீறி மண் எடுப்பதாகவும், பாறைகள் தகர்க்கப்படுவதாகவும், புகார் உள்ளது.

இந்நிலையில், குவாரி மற்றும் செங்கல் சூளைகளில், திருப்பூர் எஸ்.பி., ஆஸ்ரா கர்க் தலைமையிலான போலீசார், நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர். விதிகளுக்கு உட்பட்டு பணிகள் நடைபெறுகிறதா, என ஆய்வு நடத்தப்பட்டதாக, கூறப்படுகிறது. பின்னர், உடுமலை தாலுகா அலுவலகத்தில், எஸ்.பி., மற்றும் வருவாய் கோட்டாட்சியர் லதா பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி போலீஸ் மற்றும் வருவாய்துறை தரப்பில், எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment