போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Friday 7 September 2012

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?: பஸ் டிக்கெட்டுக்கு முன்பதிவு துவக்கம்

திருப்பூர்: "தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர், விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிக்க, இன்று முதல் டிக்கெட் "ரிசர்வேஷன்' செய்து கொள்ளலாம்,' என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.நடப்பாண்டு நவ., 13ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கியுள்ள பலர், குடும்பத்துடன் சொந்த ஊர் செல்வர். கூட்ட நெரிசலை தவிர்க்க, பண்டிகையை ஒட்டி, சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்குவது வழக்கம். இதற்கான அறிவிப்பு, அக்., இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும்.அதற்கு முன், விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கான டிக்கெட் "புக்கிங்' இன்று துவங்குகிறது. திருப்பூரில் இருந்து சென்னை, திருச்செந்தூர், வேளாங்கன்னி, நாகர்கோவில், ராமேஸ்வரம், ராஜபாளையம், கும்பகோணம், அறந்தாங்கி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விரைவு பஸ்களில் பயணிப்பதற்கான "ரிசர்வேஷன்' டிக்கெட்டுகளை, http://www.tnstc.in/TNSTCOnline/  என்ற இணைய தளத்தில் "புக்' செய்யலாம்.போக்குவரத்து துறையினர் கூறியதாவது:இணைய தளத்தில் பயணியின் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்ய வேண்டும். டிக்கெட் இருக்கை நிலை உடனடியாக தெரியும். பஸ் புறப்படும் நேரம், சேரும் நேரம், பஸ் எண், குளிர்சாதன வசதியுள்ளதா; சாதாரண பஸ்சா என்பது குறித்த விவரங்களும் இணைய தளத்தில் இடம் பெற்றிருக்கும், என்றனர். 

No comments:

Post a Comment