போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 19 September 2012

திருப்பூர் நாளை வேலை நிறுத்தம் அனைத்து தரப்பினரும் ஆதரவு


திருப்பூர்:டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் மானியம் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. திருப்பூரில் பனியன் தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் என்ற மத்திய அரசு அறிவிப்பால், தொழில் துறையினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மத்திய அரசின் போக்கை கண்டித்து, நாடு தழுவிய அளவில், நாளை (20ம் தேதி) வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்திலும், பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த ஓராண்டாக, ஓயாத மின்வெட்டு பிரச்னையால், சிக்கித்தவிக்கும் திருப்பூர் தொழில் துறையினரும், டீசல் விலை உயர்வால் அதிர்ச்சியில் உள்ளனர். அதனால், தொழில் துறையினர், தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங் கள், பனியன் வர்த்தகர்கள், ஆட்டோ-வேன் ஓட்டுனர்கள் என அனைத்து தரப்பினரும் ஓரணியில் திரண்டு, போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
பின்னலாடை ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் (டீமா) சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள், டீசலை பெரிதும் நம்பியுள்ளன. 

மின்வெட்டு அதிகமாக உள்ள நேரங்களில், டீசலை நம்பியே தொழில் நடக்கிறது. மத்திய அரசு,  பின்னலாடை தொழில் துறையினருக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலை மோசமாக உள்ளது.ஆனால், விலையை மீண்டும் உயர்த்தியிருப்பது, பொதுமக்களுக்கும், பனியன் தொழில் துறையினருக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தொழில் நிலவரத்தை மத்திய அரசுக்கு உணர்த்தி, டீசல் விலையை குறைக்கச் செய்ய வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து தொழில் துறையினரும் பங்கேற்க வேண்டும், என்றார்.சி.ஐ.டி.யு., பனியன் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி கூறுகையில், ""போராட்டத்துக்கு தேசிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள் ளன. திருப்பூரை பொறுத்தவரை, பனியன் தொழிலாளர் கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்பர்; தொழிற் சாலைகள் இயங்காது. ஆட்டோ, வேன் உரிமையாளர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காதர் பேட்டையில் உள்ள பனியன் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும்,'' என்றார்.

No comments:

Post a Comment