போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 29 September 2012

கோவையில், கடந்த இரண்டு நாட்களாக, காட்மா சார்பில், நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.


கோவையில், கடந்த இரண்டு நாட்களாக, காட்மா சார்பில், நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
காட்மா தலைவர் ரவிக்குமார் கூறியதாவது: சென்னைக்கு மூன்று மணி நேரம் மின்வெட்டை அறிவித்து, அந்த மின்சாரத்தை, பிற மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும். வெளிச் சந்தையிலிருந்து மின்சாரம் பெற்று, தொழில் நகரங்களுக்கு, வழங்க வேண்டும் என்ற, இரண்டு கோரிக்கைகள், அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டன. இக்கோரிக்கைகளை, அதிகாரிகள், ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, தற்காலிகமாக, போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. அடுத்த, 15 நாட்களுக்குள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால், அனைவரும் குடும்பத்துடன் வந்து, உண்ணாவிரதம் இருப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.
மின்வாரியம் விளக்கம்: மின்வாரிய முதன்மை இன்ஜி., தங்கவேலு கூறியதாவது: காட்மா சங்கம் தெரிவித்த கோரிக்கைகளை, எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம். காற்றாலை மற்றும் பருவமழை இல்லாததால், தற்போது இந்நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில், வடசென்னை, மேட்டூர், வள்ளூர் பகுதிகளில் புதிய மின் திட்டங்களின் உற்பத்தி துவங்குவதால், மின்சாரம் சீராகும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, தங்கவேலு கூறினார்.

No comments:

Post a Comment