போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 23 February 2013

திருப்பூர்: "பார்கோடிங்' கருத்தரங்கு

 திருப்பூர்: தொழில் நிறுவனங்கள், தங்களது"பார்கோடிங்' பதிவு செய்வது தொடர்பான பயிற்சி கருத்தரங்கு, திருப்பூரில் வரும் 25ல் நடக்கிறது.மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் சார்பில், எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் சார்பில், திருப்பூர் குமார் நகர், கதர் கிராம தொழில்கள் வாரிய வளாகத்தில், "பார்கோடிங்' பயிற்சி கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

கருத்தரங்கு மூலம், பார்கோடிங் குறித்த விளக்கம், பதிவு செய்யும் வழிமுறை, உள்நாடு மற்றும் வெளிநாடு வியாபாரத்தில் பெறும் நன்மைகள், "பார்கோடிங்' பதிவு செய்வதற்கு, மத்திய அரசின் மானிய திட்டங்கள், மானியம் பெறும் வழிமுறை குறித்து விளக்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0422 - 2233 956 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment