திருப்பூர் : ஊத்துக்குளி அருகே அனுமதியின்றி குவாரியில் கல், மண் எடுத்துச் சென்ற லாரிகள், டிராக்டர், பொக்லைன் இயந்திரம், கம்பரசர் ஆகிய ஆறு வாகனங்களை, கனிம வளத்துறையினர் நேற்று பிடித்தனர். சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க ஆர்.டி.ஓ.,க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி அருகே முரட்டுப்பாளையத்தில் குவாரிகள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்து "பெர்மிட்' இல்லாமல் கனிம வளமான கற்கள், மண் ஆகியவை லாரிகளில் கடத்துவதாக, கனிம வளத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கனிம வளத்துறை உதவி இயக்குனர் முருகானந்தம் தலை மையில் பணியாளர்கள், முரட்டுப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்."பெர்மிட்' இல்லாமல், கற்களை எடுத்து வந்த மூன்று லாரிகள், மண் எடுத்து வந்த டிராக்டர், கற்களை லாரியில் லோடு செய்ய பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், வெடிவைக்க துளை போட்ட கம்பரசர் டிராக்டர் என ஆறு வாகனங்களை பிடித்தனர். இவ்வாகனங்கள், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க, கனிம வளத்துறை உதவி இயக்குனர், ஆர்.டி.ஓ.,க்கு பரிந்துரை செய்துள்ளார். முரட்டுப்பாளையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனிம வளத்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment