போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 4 August 2012

திருப்பூரில்டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணிமனை

திருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில், டிரான்ஸ்பார்மர் சிறப்பு பராமரிப்பு பணிமனை திறக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மின்வாரிய பகிர்மான வட்டத்தில், திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம் ஆகிய கோட்டங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்தால், கோவை தலைமை மின்வாரிய நிலையத்தில் உள்ள சிறப்பு பராமரிப்பு பணிமனைக்கு அனுப்பப்பட்டன. அங்கு பழுதை சரி செய்து அனுப்ப, இரண்டு நாட்களாகும். பழுதை சரி செய்ய, அங்கு டிரான்ஸ்பார்மர்கள் அதிகமாக இருந்தால், மேலும் ஒரு நாளாகும். இப்பணிக்காக இரண்டு பணியாளரும் உடன் செல்ல வேண்டும். இதனால், பணிகள் பாதிப்பதோடு, ஊழியர்கள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். அதனால், திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், டிரான்ஸ்பார்மர் சிறப்பு பராமரிப்பு பணிமனை புதிதாக அமைக்கப்பட்டது. கோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேலு நேற்று திறந்து வைத்தார். திருப்பூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா, செயற்பொறியாளர் பிரேமலதா மற்றும் உதவி செயற்பொறியாளர், பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment