போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Thursday 30 August 2012

ஊத்துக்குளி அருகே தனியார் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

திருப்பூர் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், அக்கூட்டத்தை புறக்கணித்த சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தனியார் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மக்களின் கருத்துகளை அறியும் வண்ணம், கலெக்டர் தலைமையிலான கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அனல்மின் நிலையத்தால், தாங்கள் மேற்கொண்டுள்ள விவசாயம் பாதிக்கப்படும் என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதைப் புறக்கணித்துள்ளன.

No comments:

Post a Comment