போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday 28 August 2012

ஊத்துக்குளி சிறு குவாரி உரிமையாளர் முறையீடு


திருப்பூர்:"அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரிக்கும் குவாரிகளுக்கு குடிசைத் தொழில் அங்கீகாரம் வழங்க வேண்டும்,' என, சிறு குவாரி உரிமையாளர்கள் முறையிட்டுள்ளனர்.ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையம் பகுதியில் சேடர் பாளையம், தொட்டியவளவு, சப்பட்ட நாயக்கன்பாளை யம், திம்மநாயக்கன்பாளையம் ஆகிய ஊர்களிலும், ஏ.பெரியபாளையம் பகுதியில், வெள்ளியம்பாளை யம், கோவிந்தம்பாளையம், நல்லகட்டிபாளையம், ஊனாங்காட்டுப்பாளையம், பெத்தாம்பாளையம் ஆகிய ஊர்களிலும், சிறு கல் குவாரிகள் ஏராளமாக உள்ளன. இங்கிருந்து கற்களை வெட்டியெடுத்து அம்மிக்கல், ஆட்டுக் கல், கிரைண்டர்களுக்கு கல் தயாரித்து விற்கப்படுகிறது.
அண்மையில், மதுரை பகுதியில் குவாரிகள் மூலம் நடந்த ஊழல்கள் மற்றும் விதிமீறல்கள் குறித்த பிரச்னையை தொடர்ந்து, திருப்பூரிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு நடத்திய அதிகாரிகள், "முறையாக உரிமம் மற்றும் பெர்மிட் பெற்ற பின்பே கல் எடுக்க வேண்டும்,' என, அறிவுறுத்தியுள்ளனர். இதனால், கடந்த 10 நாட்களாக கல் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிறு குவாரி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள், ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கலெக்டர் அலு வல கம் வந்தனர். "இத்தொழிலுக்கு குடிசை தொழில் அங்கீ காரம் பெற, ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்தி உரிமம் பெற தயாராக உள்ளோம்,' என, கலெக்டர் அலுவலகம் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் மனு அளித்தனர்

No comments:

Post a Comment