போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 4 August 2012

திருப்பூரில் இலவச அமரர் ஊர்தி சேவையை பெற


 திருப்பூரில் இலவச அமரர் ஊர்தி சேவையை பெற 155377 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என சுகாதாரத் துறை இணை இயக்குநர் (மருத்துவம்) ஜி.திருமலைசாமி தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இம் மருத்துவமனைக்கு ரூ.2 கோடியை அரசு வழங்கி உள்ளது. இந் நிதி மூலமாக மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடத்தின் மேல்தளத்தில் புதிதாக கட்டடம் கட்டப்படும். இதில், மகப்பேறு வெளிநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு செயல்படும். திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 12 உள்ளன. கூடுதலாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் உயர்தர பாதுகாப்பு சாதனங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட உள்ளது. விபத்தில் அடிபட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துவர 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் யன்படுத்தப்படுவதுபோல், விபத்தில் இறந்தவர்களை எடுத்துச் செல்ல இலவச அமரர் ஊதி வாகனங்கள் அரசால் ழங்கப்பட்டுள்ளன. திருப்பூர், தாராபுரம், உடுமலை ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு தலா ஒரு இலவச அமரர் ஊர்தி வாகனம் அளிக்கப்பட்டுள்ளன. இச் சேவையை பயன்படுத்த விரும்புவோர் "155377' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் கேன்சர் ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தொற்றா நோய் சிகிச்சைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனை செய்து, அட்டை வழங்கப்படும். இம் மருத்துவமனைக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே, சிறுநீரக டயாலிஜிஸ் ஆகிய வசதிகள் விரைவில் செய்துதரப்படும். மடத்துக்குளத்தில் தாலுகா அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment