திருப்பூர், அக். 9: ஊத்துக்குளி பேரூராட்சியில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
÷ஊத்துக்குளி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வாரம் இருமுறை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், தேவையான பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குடிநீர்க் குழாய்கள் அமைக்க வேண்டும், பொது சுகாதாரத்தைப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
÷சமுதாய நலக் கூடத்தில் அனுமதி கேட்கும் மக்களுக்கு அலைக்கழிக்காமல் அனுமதி வழங்க வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதை முன்வைத்து பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
÷ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆர். குமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கை. குழந்தைசாமி, வி.கே. பழனிசாமி, எஸ். லட்சுமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். பின்னர் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
÷ஊத்துக்குளி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வாரம் இருமுறை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், தேவையான பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குடிநீர்க் குழாய்கள் அமைக்க வேண்டும், பொது சுகாதாரத்தைப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
÷சமுதாய நலக் கூடத்தில் அனுமதி கேட்கும் மக்களுக்கு அலைக்கழிக்காமல் அனுமதி வழங்க வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதை முன்வைத்து பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
÷ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆர். குமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கை. குழந்தைசாமி, வி.கே. பழனிசாமி, எஸ். லட்சுமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். பின்னர் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment