போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 24 November 2012

மின்வெட்டு பிரச்னை : அரசின் கவனத்தை ஈர்க்கவே திருப்பூரில் 28-ம் தேதி பேரணி


திருப்பூர்: மின்வெட்டு பிரச்னை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருப்பூரில் வரும் 28ம் தேதி  பேரணி நடக்கிறது என்று திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு அறிவித்துள்ளது. திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, விஜயகுமார் ஆகியோர் அளித்த பேட்டி:  கடும் மின்வெட்டால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழில் துறையினர் பெரும¢ அவதிப்படுகின்றனர். குறித்த நேரத்தில் பனியன் ஆர்டர்களை அனுப்ப முடியாமலும், புதிய ஆர்டர்களை வாங்க முடியாமலும் தொழில் துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. விடுமுறையில் ஊருக்கு சென்ற தென் மாவட்ட தொழிலாளர்கள் திரும்பிவரவில்லை. விசைத்தறி தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள¢ளப்பட்டுள்ளனர்.  திருப்பூர், கோவை மாவட்டங்கள் ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி, விசைத்தறி, பஞ்சாலை, விவசாயம் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது.  மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி கொடுக்கிறது. மின்பற்றாக்குறையை போக்க மத்திய அரசு மின் தொகுப்பிலிருந்து அரசு தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும். தாமதமாக நடைபெற்றுவரும் புதிய மின் உற்பத்தி நிலைய திட்டங்களை துரிதமாக செயல்படுத்தி, மின் உற்பத்தியை மிகவேகமாக தொடங¢கவேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில், மின¢ உற்பத்தியை உடனடியாக தொடங்கவேண்டும். உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழில் நிறுவனங¢கள், வெளிமாநிலத்தில் இருந்து நேரடியாக மின்சாரத்தை வாங்க அனுமதி அளிக்க வேண்டும். திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களின் நிலையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் 28ம் தேதி பேரணி நடத்தப்படவுள்ளது.  பேரணி அரசுக்கு எதிரானது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment