போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 28 November 2012

கேபிள் இணைப்பு படிவம் ரேஷன் கடைகளுக்கு வினியோகம்


:திருப்பூர் மாவட்டத்தில் கேபிள் "டிவி' கணக்கெடுப்பு படிவங்கள், அந்தந்த ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பொருட்கள் வாங்க வரும் கார்டு தாரர்களிடம் படிவத்தை கொடுத்து, விரைவில் பூர்த்தி செய்து பெற விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கேபிள் இணைப்புகள் எவ்வளவு உள்ளன என்பதை கண்டறிய கணக்கெடுக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு 7.26 லட்சம் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை, ஏழு தாலுகாக்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அடுத்த மாதம் பொருட்கள் வழங் கும்போது, கார்டுதாரர்களிடம் படிவங்கள் வழங்கப்படும்.
உடனடியாக பூர்த்தி செய்து திருப்பி வழங்கலாம். அவகாசம் தேவை எனில், வீட்டுக்கு எடுத்துச்சென்று, படிவத்தை பூர்த்தி செய்து இரண்டு நாட்களில் திரும்ப கொடுக்கலாம். நகரப்பகுதியில் உள்ள கடைகளில், படிவங் கள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.படிவங்கள் கையாள்வதில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, வரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த படிவங்களை வரிசைப்படுத்தி, தாலுகா குடிமைப்பொருள் வழங்கல் பிரிவில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. படிவங்களை விரைவில் பெறுவதற்காக, கார்டுதாரர்களுக்கு உதவியாக விற்பனையாளரே பூர்த்தி செய்து, கையொப்பம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள், கேபிள் இணைப்பு விவரங்களை எவ்வாறு தெரிவிப்பது என குழப்பம் அடைந்துள்ளனர்.கேபிள் "டிவி' தனி தாசில்தார் சிவசுப்ரமணியத்திடம் கேட்ட போது,""முதல்கட்டமாக, ரேஷன் கடைகளுக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. கார்டு இல்லாதவர்களும், படிவத்தை கேட்டுப்பெற்றும், வெள்ளை தாளில் விவரங்களை எழுதியும், அருகில் உள்ள ரேஷன் கடையில் கொடுக்கலாம். கேபிள் ஆப்பரேட்டர்களிடம் இருந்து கடந்த மாத நிலுவை வசூலாகிவிட்டது. நடப்பு மாத கட்டணத்தில் 65 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் நிலுவை தொகையும் வசூலிக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment