போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 3 November 2012

பாதியில் நிற்கும் சுரங்க பாலம் பணிநீர் தேங்காமல் இருக்க தடுப்பு சுவர்


திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, பாதியில் நிறுத்தப்பட்ட சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த பழைய சுரங்க பாலத்தை இடித்து விட்டு, 1.5 கோடி ரூபாய் செலவில் புதிதாக சுரங்க பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. கூடுதல் நீளத்தில் பாலம் அமைக்க திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கால்நடைத்துறையிடம் இருந்து நிலம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், பாலம் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மழைநீர், பாலத்துக்குள் தேங்கி, துர்நாற்றம் ஏற்பட்டு வந்ததோடு, கொசு உற்பத்தியும் அதிகரித்தது. மாநகராட்சி சார்பில் கழிவு நீர் அகற்றப்பட்டது. அப்போது, இனி, தண்ணீர் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறைக்கு வலியுறுத்தப்பட்டது. தற்போது, அப்பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
"சுரங்க பாலம் கட்ட அனுமதி கிடைக்கும் வரை, பாலத்துக்குள் தண்ணீர் செல்லாதவாறு தற்காலிகமாக தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. கழிவு நீர் மற்றும் மழை நீர் எளிதாக வெளியேறும் வகையில் குழாய் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்

No comments:

Post a Comment