போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 25 November 2012

:திருப்பூரில் மின் தடையிலும் பாரபட்சம்; குமுறும் பொதுமக்கள்


திருப்பூரில், மின் தடை ஏற்படுவதில், சில பகுதிகளுக்கு மட்டும் கூடுதல் நேரம் மின்சாரம் வழங்கி பாரபட்சம் காட்டி வருவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மின் பற்றாக்குறை காரணமாக, திருப்பூரில், தினமும் நான்கு முதல் ஆறு மணி நேரம் மட்டுமே மின் வினியோகம் செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் மொத்த மின் உற்பத்தியை கணக்கிட்டு, மின்சார இருப்பு அடிப்படையில் அவ்வப்போது துணை மின் நிலையங்களில் மின் தடை ஏற்படுத்த உத்தரவிடப்படுகிறது. திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஈரோடு "லோடு செட்டிங்' சென்டர் மூலம் நேரடியாக 240, 230 கே.வி., துணை மின் நிலையங்களுக்கு உத்தரவு வழங்கப்படுகிறது.இந்த துணை மின் நிலையங்களுக்கு கீழுள்ள 110, 90, 33 கே.வி., துணை மின் நிலையங்களில் ஒரு சிலவற்றுக்கு நேரடியாக மின் நிறுத் தம் செய்யப்படாமல் மின் வினியோகம் செய்யப்படுகிறது. சில சிறிய துணை மின் நிலையங்களுக்கு இரண்டு பெரிய துணை மின் நிலையங்களுக்கு தொடர்பு இருக்கும். இதையும் பயன்படுத்தி, முக் கியமான நபர்களுக்கு மின் வினி யோகம் செய்யப்பட்டு வருகிறது.இதன் மூலம், தொடர்ந்து ஆறு மணி நேரம் வரை மின்சாரம் கிடைப் பதோடு, துணை மின் நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் வழங்கப்படும் மின்சாரம் காரணமாக, 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் நிலையும் உள்ளது.இவ்வாறு, திருப்பூர் குமரானந்தபுரம், நெசவாளர் காலனி பகுதிகள் அருகருகே இருக்கும் நிலையில், நெசவாளர் காலனி ஒரு பீடர் பகுதியில் மட்டும், மின்வெட்டு இல்லாமல் தொடர்ந்து 8 மணி நேரம் வரை மின் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. அப்பகுதி பனியன் நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள் புகார் எழுப்பியதையடுத்து, ஆய்வு செய்தபோது மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் காரணமாக, மின்சாரம் தொடர்ந்து வழங்கப் பட்டது கண்டறியப்பட்டது.
அதேபோல், சந்தைபேட்டை துணை மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் ஒரு பீடரில் மட்டும், தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு, கலெக்டர் அலுவலகம், அப்பகுதியில் அமைந்துள்ளதால் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இவ்வாறு, பாரபட்சமான முறையில், சில பகுதிகளுக்கு மட்டும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், துணை மின் நிலையங்களில் முறையாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா கூறியதாவது: கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருவதால், தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலகத்தில் "பில்லிங்' பணிகள் இருப்பதால், நெசவாளர் காலனி பகுதியில் மின் தடை குறைந்து காணப்படும். மின் பகிர்மான கழக அலுவலகத்திற்கு மட்டும் வேண்டாம்; இருக்கும்போது பணிகள் மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், அனைத்து பகுதிகளிலும் உள்ளதுபோல்,நெசவாளர் காலனி பகுதியிலும் மின் தடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment