திருப்பூர், ஜூன்.20
பெரியாண்டிபாளையம் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா பகுதி 5-வது வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 48). பனியன் கம்பெனி அதிபர். அவரது மனைவி சுகுணா (38). பழனிச்சாமி நேற்று இரவு மனைவி சுகுணாவை கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அங்கு மனைவியை விட்டுவிட்டு தான் மட்டும் 3 மணி நேரத்தில் திருப்பூருக்கு திரும்பினார். வீட்டுக்கு சென்ற போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி உள்ளே சென்று பார்க்கலாம் என நினைத்து கதவை திறந்த போது திடீரென 2 மர்ம நபர்கள் பழனிச்சாமியை தாக்கி கீழே தள்ளிவிட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடினர்.
பதட்டமடைந்த பழனிச்சாமி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.அதற்குள் இரண்டு பேரும் மாயமாகிவிட்டனர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 23 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தன. அப்போது தான் வீட்டிற்குள் இருந்து ஓடிய மர்ம நபர்கள் திருடர்கள் என தெரியவந்தது. திருட்டுப் போன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
இதுகுறித்து பழனிச்சாமி மங்களம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
வீட்டை பூட்டி சென்ற 3 மணி நேரத்திற்குள் கொள்ளை நடந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment