காங்கயம் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் திருநாவுக்கரசு. இவர் காங்கயம் வழியாக வந்த மணல் லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினார்.
லாரி நின்றதும் டிரைவரிடம் லஞ்சம் கேட்டார். மேலும் அந்த தொகையை அவர் அங்குள்ள ஓட்டலில் கொடுக்கும்படி டிரைவரிடம் கூறினார். இன்ஸ்பெக்டர் கூறியபடி லஞ்சப்பணத்தை ஓட்டலில் உள்ளவர்களிடம் கொடுத்த மறு நிமிடமேஅந்த லாரி டிரைவர் திருப்பூர் சூப்பிரண்டு அஸ்ராகார்க்குக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அஸ்ராகார்க் காங்கயம் விரைந்து சென்று லாரி டிரைவர், ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்ததில் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு லஞ்சம் வாங்கியது உறுதியானது.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசை சஸ்பெண்டு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
போலீஸ் சூப்பிரண்டின் இந்த அதிரடி நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment