பல்லடம் ஜுன்.10,
பல்லடம் மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள மங்கலம் ரோட்டைச் சேர்ந்தவர் தனபால் (வயது 45). இவர் தனது வீட்டுக்குள் உள்ள மேஜை டிராயரில் 8 பவுன் நகையை வைத்திருந்தார்.
யாரோ மர்ம மனிதன் வீட்டுக்குள் புகுந்து டிராயரில் இருந்த நகையை திருடிச் சென்றுவிட்டான். அதன் மதிப்பு ரூ.80 ஆயிரம். நகை திருட்டுப் போனதை அறிந்த தனபால் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பல்லடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் திருட்டு போனதில் 4 1/2 பவுன் நகை என்ஜினீயரின் வீட்டுக்குள் கிடந்தது. அதை யாரோ மர்ம மனிதர்கள் ஜன்னல் வழியே வீசிச் சென்றுள்ளனர். போலீசில் புகார் செய்ததால் பயந்து நகையை வீசிச் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. எனவே நகைத் திருடன் அதே பகுதியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
நகை திருடனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment