போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 8 August 2012

2013ம் ஆண்டுக்கான பட்டியல் தயாராகிறது வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை முழுமையாக செயல்படுத்த வேண்டும்


திருப்பூர், : திருப்பூர் தெற்கு தொகுதி புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ், புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியினை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

 திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் வெங்கடாசலம், துணை வட்டாட்சியர்(தேர்தல்) சுப்ரமணியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 
பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் பேசுகையில், ‘திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 206 வாக்குச் சாவடி மையங்களில் உள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், 2013ம் ஆண்டிற்குண்டான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியினை பொறுப்புடனும், முழு ஈடுபாடுடனும் செயல்பட்டு பணியாற்றிட வேண்டும். மற்ற நகரங்களைவிட திருப்பூர் மாநகரில் மக்கள் அடிக்கடி இடம் மாறுவது உண்டு. முறையான படிவங்களை அவர்களிடம் அளித்து பெயர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்துதல்  போன்ற பணிகளை சிறப்புடன் செயலாற்ற வேண்டும். வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்பு நலச் சங்கங்களை அணுகி வாக்காளர் பட்டியலை படித்து காண்பிக்க வேண்டும். 
புதிய வாக்காளர் பெயர் சேர்ப்புடன் அவர்களுக்கு புதிய வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையும் பெற்றுத் தர வேண்டும். மேலும், உள்ளுர் மக்களிடம் நல்ல நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும், வழிகாட்டியாகவும் இருந்து தேசிய நலனை காக்கின்ற புற வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியினை  100 சதவீதம் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்,’’ என்றார்.
 தொடர்ந்து நடந்த பயிற்சி முகாமில், பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக விளக்கப்பட்டது. இந்த முகாமில் 60க்கும் அதிகமான நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment