திருப்பூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் சோதனை முடிந்து விட்டது. திருப்பூர் வடக்கு மற்றும் அவினாசி பகுதிகளில் வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி தலைமையில் சோதனை நடந்தது. இதில் 380 பள்ளி வாகனங்கள், 83 கல்லூரி வாகனங்களை சோதனையிட்டதில் 22 பள்ளி வாகனங்கள், 10 கல்லூரி வாகனங்கள் என்று 32 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.
129 வாகனங்களில் உள்ள சிறு, சிறு குறைகளை நிவர்த்தி செய்ய நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. இதேபோல் திருப்பூர் தெற்கு, பல்லடம் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரி சத்யநாராயணன் தலைமையில் நடந்த சோதனையில் 223 பள்ளி வாகனங்கள், 19 கல்லூரி வாகனங்கள் என்று 242 வாகனங்கள் சோதனையிடப்பட்டது. இதில் 8 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. இதில் 2 வாகனங்களை தகுதி இழப்பு செய்து அந்த வாகனங்களை ஓட்டக்கூடாது என்று நிறுத்தப்பட்டு உள்ளது.
44 வாகனங்களில் உள்ள சிறு குறை களை நிவர்த்தி செய்ய நோட்டீசு வினியோகம் செய்தனர். இதில் 20 வாகனங்களில் பழுது நீக்கப்பட்டு போக்கு வரத்து அதிகாரிகளிடம் காண்பித்து ஓட்டுவதற்கு அனுமதி பெற்றனர். தாராபுரம் மற்றும் உடுமலை பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரி உதயகுமார் தலைமையில் நடந்த சோதனையில் 112 பள்ளி வாகனங்கள், 17 கல்லூரி வாகனங்கள் என்று 129 வாகனங்கள் சோதனையிடப்பட்டது. இதில் 11 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்ட வாகனங்களில் உள்ள பழுதுகளை சீரமைத்து அதன் பின்னர் வட்டார போக்குவரத்து அதிகாரியின் அனுமதியை வாங்கிய பிறகே இயக் குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்
129 வாகனங்களில் உள்ள சிறு, சிறு குறைகளை நிவர்த்தி செய்ய நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. இதேபோல் திருப்பூர் தெற்கு, பல்லடம் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரி சத்யநாராயணன் தலைமையில் நடந்த சோதனையில் 223 பள்ளி வாகனங்கள், 19 கல்லூரி வாகனங்கள் என்று 242 வாகனங்கள் சோதனையிடப்பட்டது. இதில் 8 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. இதில் 2 வாகனங்களை தகுதி இழப்பு செய்து அந்த வாகனங்களை ஓட்டக்கூடாது என்று நிறுத்தப்பட்டு உள்ளது.
44 வாகனங்களில் உள்ள சிறு குறை களை நிவர்த்தி செய்ய நோட்டீசு வினியோகம் செய்தனர். இதில் 20 வாகனங்களில் பழுது நீக்கப்பட்டு போக்கு வரத்து அதிகாரிகளிடம் காண்பித்து ஓட்டுவதற்கு அனுமதி பெற்றனர். தாராபுரம் மற்றும் உடுமலை பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரி உதயகுமார் தலைமையில் நடந்த சோதனையில் 112 பள்ளி வாகனங்கள், 17 கல்லூரி வாகனங்கள் என்று 129 வாகனங்கள் சோதனையிடப்பட்டது. இதில் 11 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்ட வாகனங்களில் உள்ள பழுதுகளை சீரமைத்து அதன் பின்னர் வட்டார போக்குவரத்து அதிகாரியின் அனுமதியை வாங்கிய பிறகே இயக் குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment