போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 11 August 2012

திருப்பூர் :ரயிலில் விழுந்து இறப்பவர்கள் யார்?திணறும் ரயில்வே போலீசார்


 ரயிலில் விழுந்து இறப்பவர்கள் யார் என்று தெரியாத சூழலில், விசாரணை நடத்துவதற்கு, சென்னையில் பின்பற்றுவதுபோல், திருப்பூரில் தனிக்குழு ஏற்படுத்த வேண்டும்.ரயில் முன் விழுந்து தற்கொலை, வாகனங்கள் மீது மோதல், கால்நடைகள் மீது மோதல் போன்ற காரணங்களுக்காக ரயிலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், அத்தகைய விபத்தின்போது ரயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் நிறுத்திக் கொள்ளலாம். இத்தகைய விதிமுறைகளாலும், பின்னால் வரும் ரயில்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், தனி நபர் தற்கொலைகளின்போது ரயிலை நிறுத்துவதில்லை.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் சரகத்தில் வஞ்சிபாளையம், முதல் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட், மண்ணரை, கூலிபாளையம், ஊத்துக்குளி பகுதி ரயில்வே டிராக்கில் விழுந்து பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தாண்டு துவக்கம் முதல் கடந்த வாரம் வரை 76 பேர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துள்ளனர். இறந்தவர் அணிந்திருந்த ஆடையில், முகவரி மற்றும் உறவினர்களை பற்றிய விவரம் இருந்தால், தகவல் சொல்வதற்கு உதவியாக இருக்கிறது.வயதானவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொள்ளும்போது அவர் யார்; எந்த ஊர்; என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டனர் என போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பின்பும் உறவினர்கள் யாரும் தேடி வராமல் இருந்தால், பிரேதத்தை அடக்கம் செய்ய தனியார் தொண்டு நிறுவனத்தை நாட வேண்டியுள்ளது. இறந்தவர் பெயரில் சந்தேகம், உடலில் வெட்டு காயங்கள் இருந்தால் என்.ஜி.ஓ.,க்களும் அடக்க செய்ய முன்வருவதில்லை. ரயில்வே போலீசார் செய்வதறியாது திகைக்கின்றனர்.சென்னையை பின்பற்றலாமே!சென்னையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்பவர் எண்ணிக்கை ஏராளம். இறந்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க உள்ளூர் பிரதிநிதி, போலீஸ் அதிகாரி ஒருவர், என்.ஜி.ஓ., ஒருவர், ரயில்வே போலீஸ் பணியில் உள்ள மூத்த அதிகாரி உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர் பற்றிய விவரம் கிடைக்கவில்லையெனில், அப்பகுதியில் உள்ள மக்களிடம் அக்குழு விசாரணை நடத்தும். உறவினர்கள் இருந்தால் பிரேதம் ஒப்படைக்கப்படும். இதேபோல், திருப்பூரிலும் குழு அமைத்தால் ரயில்வே போலீசாரின் தலைவலி தீரும்.

No comments:

Post a Comment