போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 8 August 2012

ஊத்துக்குளியில் மாவட்ட கவுன்சிலர் காரை திருடியவர் கைது


திருப்பூர், : ஊத்துக்குளி திம்மநாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் பெரியசாமி. திருப்பூர் மாவட்ட கவுன்சிலராக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டு முன் தனது காரை நிறுத்தி இருந்தார். 

அந்த காரை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஊத்துக்குளி ரயில்வே மேம்பாலத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி, டிரைவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த கார்
மாவட்ட கவுன்சிலருடையது என தெரிய வந்தது.இதையடுத்து, காரை ஓட்டி வந்த நபரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பொம்முடி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் சிங்காரவேலன் (23) என தெரிய வந்தது.இவருக்கு உடந்தையாக இருந்த சுரேஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment