போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 8 August 2012

கேஸ் பைப் லைன் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்': விவசாயிகள் குழு வலியுறுத்தல்

பெங்களூரு கேஸ் பைப் லைன் திட்டத்தை, விவசாய நிலங்கள் தவிர்த்து, மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு குழு சார்பில், பெட்ரோலிய துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கெய்ல் நிறுவனம் சார்பில், கொச்சி,பெங்களூரு கேஸ் பைப் லைன் திட்டம், தமிழகம் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதால், மாற்று வழியில், இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு குழு சார்பில், பெட்ரோலிய துறை அமைச்சரிடம்,கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மனுவில் தெரிவித்திருப்பதாவது:கொச்சி, பெங்களூரு கேஸ் பைப் லைன் திட்டம், தமிழத்திலுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம், ஏழு மாவட்டங்களிலுள்ள 136 கிராமங்களின், 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், பத்தாயிரம் விவசாயிகள், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர்.கேஸ் பைப் லைன் திட்டத்தினால், மூன்று ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களை இழக்க நேரிடும்; வேறு இடத்துக்கு மாற வேண்டிய நிலையுள்ளது. இத்திட்ட பாதையில், தேங்காய், மாம்பழம், சப்போட்டா போன்ற நீண்டகால, பயன் தரும் பழ வகைகளை விவசாயிகளால், பயிரிட முடியாது. எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்பட்டால், விவசாயிகளே பொறுப்பேற்க வேண்டிய நிலை உள்ளது.விபத்துக்கான இழப்பீடுகள் குறித்தும், தெரிவிக்கப்படாமல் உள்ளது. சிறிய விவசாயிகள், தங்கள் நிலங்களை விற்கக் கூட முடியாமல், மிகவும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.கெய்ல் நிறுவனத்தினர், போலீஸ் உதவியுடன், விவசாய நிலங்களில் கேஸ் பைப் லைன் அமைக்கின்றனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், மேற்கு வங்க மாநிலத்திலுள்ள, நந்திக் கிராமம் போல், தமிழகம் மாறுவதை அனுமதிக்க முடியாது என, கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனவே, விவசாய நிலங்களை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலை அல்லது ரயில்வே போன்ற, மாற்று வழியில், இத்திட்டத்தை செயல்படுத்தி, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment