போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 8 July 2012

பல்லடம் அருகே ரூ. 20 ஆயிரம் கடனுக்காக தாளாளர் கன்னத்தில் அடித்ததால் ஆசிரியை தற்கொலை முயற்சி


பல்லடம் அருகே ரூ. 20 ஆயிரம் கடனுக்காக தாளாளர் கன்னத்தில் அடித்ததால் ஆசிரியை தற்கொலை முயற்சி
பல்லடம் வடுகபாளையம் ஆஸ்டல் வீதியை சேர்ந்தவர் பாலசரஸ்வதி (வயது 34). இவர் வடுகபாளையம்-சித்தம்பலம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். 

ஆசிரியை பாலசரஸ்வதி குடும்ப சூழ்நிலை காரணமாக தாளாளர் பாலசுப்பிரமணியிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அந்த கடன் தொகையை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. ஆசிரியையின் குழந்தைகளும் அதே பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் படிப்புக்கு உரிய கட்டணத்தையும் கட்டச் சொல்லி பாலசுப்பிரமணி வலியுறுத்தியதாக தெரிகிறது. 

கடன் தொகையை உடனே தரச்சொல்லி வற்புறுத்தியதோடு ஆசிரியையை தரக்குறைவான வார்த்தைகளால் பாலசுப்பிரமணி திட்டியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பள்ளி தாளாளர் ஆத்திரமடைந்து ஆசிரியையின் கன்னத்தில் பளார் என அறைந்ததோடு தலை முடியைப் பிடித்து இழுத்து தாக்கியதாகவும் தெரிகிறது. 

இந்த நிலையில் ஆசிரியை தனது வீட்டுக்குச் சென்று விட்டார். அங்கு சென்ற பள்ளி தாளாளர் மீண்டும் ஆசிரியையை மிரட்டியதாக தெரிகிறது. பக்கத்து வீட்டுக் காரர்கள் தாளாளரை சமரசப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பள்ளி தாளாளர் வீடு வரை வந்து திட்டி விட்டாரே என மனவேதனை அடைந்த ஆசிரியை பாலசரஸ்வதி எறும்பு மருந்தை கரைத்து குடித்து விட்டார். 

மயங்கி விழுந்த அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பாலசுப்பிரமணியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

No comments:

Post a Comment