போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 18 July 2012

திருப்பூர் : கோவில்களில் பாதுகாப்பு பணிக்கு சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர் : கோவில்களில் பாதுகாப்பு பணிக்கு சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எஸ்.பி., ஆஸ்ரா கர்க் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் போலீசாரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு நல்ல உடல் தகுதியுடைய, 62 வயதுக்கு உட்பட்ட, எவ்வித குற்றவழக்கிலும் ஈடுபடாத, நன்னடத்தை உள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் போலீசார் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு மாத சம்பளம் 5,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், அங்கேரிபாளையம் ரோடு, திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், 0421 - 248 3100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment